உசேனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), பஞ்சமம் (ப), சுத்த மத்திமம் (ம1), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2), சாதாரண காந்தாரம் (க2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:

ஆரோகணம்: ச ரி2 ச ப ம1 ப நி22 நி2 ச்
அவரோகணம்: ச் நி22 ப ம1 ப ம12 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் சட்சம், மத்திமம், தைவதம் என்பனவும், அவரோகணத்தில் பஞ்சமமும் ஒழுங்குமாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Music Handbook - Raga Index -H 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உசேனி&oldid=3765670" இலிருந்து மீள்விக்கப்பட்டது