உடுப்பியின் எட்டு மடங்கள்

உடுப்பியின் எட்டு மடங்கள் (Ashta Mathas of Udupi) என்பது இந்து சிந்தனையின் துவைதத்தின் முன்னோடியான மத்துவரால் நிறுவப்பட்ட எட்டு மடங்கள் ஆகும். இம்மடங்கள் ஒவ்வொன்றிற்கும், மத்துவர் தனது நேரடி சீடர்களில் ஒருவரை தலைவராக நியமித்தார்.

இவைகள் முதலில் அமைந்த கிராமங்களின் பெயரைக் கொண்டுள்ளன. இன்று, மடங்கள் கோயில் நகரமான உடுப்பியில் அமைந்துள்ளது. துவைதத் தத்துவத்தை பரப்புவதற்கு மடங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவைகள் புகழ்பெற்ற உடுப்பி கிருட்டிணன் கோயிலை பரியாயம் என்ற முறையான சுழற்சி திட்டத்தின் மூலம் நிர்வகிக்கின்றனர்.

மடங்கள் தொகு

  • பெஜாவர் மடம்
  • பலிமார் மடம்
  • அடமாறு மடம்
  • புத்திகே மடம்
  • சோதே மடம்
  • காணியூரு மடம்
  • சிறூர் மடம்
  • கிட்டிணாபுரம் மடம்

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு