உஷா அனந்தசுப்ரமணியன்

உஷா அனந்தசுப்ரமணியன் ,(பிறப்பு 1 அக்டோபர் 1958), இந்தியாவில் மகளிருக்கென தனியாக உருவாக்கப்பட்டிருக்கும் பாரதிய மஹிளா வங்கியின் முதல் தலைவர்-நிர்வாக இயக்குநராவார்.[1][2]

கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை தொகு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் , மும்பை பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய கலாச்சாரத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 1982-ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த உஷா அனந்தசுப்ரமணியன், பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார். பாரதிய மஹிளா வங்கியின் தலைவர் பதவியை ஏற்கும் முன் பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநராக இருந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு