உஷா அனந்தசுப்ரமணியன்
உஷா அனந்தசுப்ரமணியன் ,(பிறப்பு 1 அக்டோபர் 1958), இந்தியாவில் மகளிருக்கென தனியாக உருவாக்கப்பட்டிருக்கும் பாரதிய மஹிளா வங்கியின் முதல் தலைவர்-நிர்வாக இயக்குநராவார்.[1][2]
கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை தொகு
சென்னைப் பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் , மும்பை பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய கலாச்சாரத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 1982-ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த உஷா அனந்தசுப்ரமணியன், பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார். பாரதிய மஹிளா வங்கியின் தலைவர் பதவியை ஏற்கும் முன் பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநராக இருந்தார்.[2]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Smt. Usha Ananthasubramanian". http://www.fibac.in/cv/Usha-Ananthasubramanian.pdf. பார்த்த நாள்: 24 நவம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 "மகளிர் வங்கியின் தலைவர் உஷா அனந்தசுப்ரமணியன்". dinamani. 13 நவம்பர் 2013. http://dinamani.com/business/2013/11/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE-/article1887948.ece. பார்த்த நாள்: 24 நவம்பர் 2013.