ஊத்துமலை
ஊத்துமலை (Uthumalai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் ஒரு கிராமம் ஆகும். இது தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது.[1]
ஊத்துமலை | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 8°59′30″N 77°31′54″E / 8.9916°N 77.5318°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | வீரகேரளம்புதூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,737 |
மொழிகள் | |
• அதிகாரபூர்வமானவை | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வரலாறு
தொகுதிருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊத்துமலை பரப்பளவு அடிப்படையில் மிகப்பெரியது.
இந்த நிலங்கள் மெட்ராஸ் பிரசிடென்சியில் 1803 நிரந்தர குடியேற்றத்தின் ஒரு பகுதியாக அமைந்தன. மேலும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால் (ஈ.ஐ.சி) ஜமீன்தாரி தோட்டமாக அங்கீகரிக்கப்பட்டது, இதன் அரண்மனை வீரகேரளம்புதூரில் இருந்தது.[2] 1823ஆம் ஆண்டில், இது 123 சதுர மைல்கள் (320 km2) பரப்பளவுடன், 14,612 மக்கள் தொகையுடன் இருந்தது.[3] நிர்வாக ரீதியாக 1917 இல் தென்காசி தாலுகாவில் இணைந்திருந்தது. அறுபத்து மூன்று கிராமங்களை உள்ளடக்கி மாவட்டத்தின் அனைத்து ஜமீன்தாரிகளில் மூன்றாவது பெரிய இடமாகும். 51,246 மக்கள் தொகையுடன் மதிப்பிடப்பட்டுள்ளது.1956 ஜமீன்தாரிமுறை ஒழிப்பின் படி தற்போது 2 ஆம் நிலை ஊராட்சியாக உள்ளது இங்கு பெரியகுளம் மற்றும் சின்னதான் குளம் என்று இரு குளங்கள் உள்ளது இதன் மூலம் விவசாயம் நடைபெறுகிறது மேலும் மழை அல்லாத சமயங்களில் வானம் பார்த்த பூமியாகவே அறியப்படுகிறது
புள்ளிவிவரங்கள்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் உத்துமலை 2168 வீடுகளையும் 7737 மக்கள்தொகையையும் கொண்டுள்ளது.இதில் 3788 ஆண்களும் 3949 பெண்களும் உள்ளனர். மக்களில் சிலர் பட்டியல் சாதியினரின் உறுப்பினர்களாக வகைப்படுத்தப்பட்டனர்; பட்டியல் பழங்குடியினரின் உறுப்பினர்கள் யாரும் இல்லை.[4]
பொருளாதாரம்
தொகு2011 ஆம் ஆண்டில் கிராமத்தின் பரப்பளவு 3,443 ஹெக்டேர் (8,510 ஏக்கர்), விவசாயம் உள்ளூர் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Revenue Administration". Tirunelveli District Administration. பார்க்கப்பட்ட நாள் 16 October 2018.
- ↑ Wives, Widows, and Concubines: The Conjugal Family Ideal in Colonial India. Indiana University Press.
- ↑ The Hollow Crown: Ethnohistory of an Indian Kingdom. University of Michigan Press.
- ↑ "Search Details". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 16 October 2018.
மேலும் படிக்க
தொகு- Baker, Christopher (January 1976). "Tamilnad Estates in the Twentieth Century". The Indian Economic & Social History Review 13 (1): 1-44. doi:10.1177/001946467601300101.
- Dirks, Nicholas B. (April 1986). "From Little King to Landlord: Property, Law, and the Gift under the Madras Permanent Settlement". Comparative Studies in Society and History 28 (2): 307–333. doi:10.1017/S0010417500013888. https://archive.org/details/sim_comparative-studies-in-society-and-history_1986-04_28_2/page/307.
- Seylon, Raman N. (2004). "Study of Poligar Violence in Late 18th Century Tamil Country in South India". African and Asian Studies 3 (3–4): 245–272. doi:10.1163/1569209332643692.