ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, நெடுவாசல்

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி (Panchayat union elementary school, Neduvasal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஓர் அரசுப்பள்ளி ஆகும். இங்கு 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. இப்பள்ளி புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னிறைவு பெற்ற தொடக்கப்பள்ளியாக திகழ்கிறது. தற்போது 4 புதிய கட்டிடங்கள், 3 ஆசிரியர்கள், 86 மாணவர்கள் என பள்ளி வளர்ச்சி அடைந்துள்ளது.[1]

பள்ளியின் செயல்பாடுகள் தொகு

  • மொழி ஆய்வகத்தின் மூலம் மாணவர்களுக்கு மொழித்திறன் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் மொழி ஆய்வகம் உள்ள ஒரே அரசுத் தொடக்கப்பள்ளி இதுவே ஆகும்.
  • கணினி மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது.
  • சமுதாயத்துடன் இணைந்த பள்ளியாக செயலாற்றுகிறது.
  • 10 நட்சத்திர விருதுபெற்ற பள்ளியாகவும் இப்பள்ளி திகழ்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "ஆச்சரியப் பள்ளி: கிராமத்தோடு சேர்ந்து வளரும் நெடுவாசல் அரசு தொடக்கப் பள்ளி". Hindu Tamil Thisai. 2017-10-09. பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.