என்கே (மொங்கோலியம்: Энх ᠡᠩᠬᠡ; சீனம்: 恩克), (?–1394) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவர் 1391 - 1394இல் ஒரு குறுகிய காலத்திற்கு ஆட்சி செய்தார். என்கேயை அடையாளப்படுத்துவது விவாதத்திற்குரிய ஒரு வரலாற்றுப் பொருளாக உள்ளது. பாரசீக வரலாற்று நூல்களின்படி, சோரிக்து என்பவர் ஏசுதர் ஆவார். என்கே கான் என்பவர் ஏசுதரின் மகனாவார். என்கே ஏசுதருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார்.[2][3] அதே நேரத்தில் மற்றவர்கள் சோரிக்து மற்றும் என்கே ஆகிய இருவருமே ஒரே நபர் என்று நம்புகின்றனர். இவரது பெயரான "என்கே" என்பதற்கு மொங்கோலிய மொழியில் "அமைதியான" என்று பொருள்.

என்கே
恩克
ᠡᠩᠬᠡ
மங்கோலியர்களின் ககான்
வடக்கு யுவான் அரசமரபின் ககான்
ஆட்சிக்காலம்1391–1394[1]
முடிசூட்டுதல்1388
முன்னையவர்சோரிக்து கான் ஏசுதர்
பின்னையவர்எல்பெக் நிகுலேசுக்சி கான்
இறப்பு1394
மரபுபோர்சிசின்
அரசமரபுவடக்கு யுவான் அரசமரபு

மங்கோலிய வரலாற்றாளர் ச. போர் என்பவரின் கூற்றுப்படி, மிங் அரசமரபுக்கு எதிராகத் தைமூருடன் என்கே ஒரு கூட்டணியை ஏற்படுத்தினார். எனினும், 1405இல் மிங் அரசமரபை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது தைமூர் இறந்தார்.

உசாத்துணை தொகு

  1. Guush Luvsandanzan. தங்கச் சுருக்கம்.
  2. Shajrat Ul Atrak: Or The Genealogical Tree Of The Turks And Tatars P.218:“The fourteenth was named Eenkeh Khan, the son of Yusoordar.
  3. Nizam ad-Din Shami. ظفرنامه (Book of Victory).
என்கே கான்
இறப்பு: 1394
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
சோரிக்து கான்
வடக்கு யுவானின் ககான்
1391–1394
பின்னர்
எல்பெக் நிகுலேசுக்சி கான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்கே_கான்&oldid=3866566" இலிருந்து மீள்விக்கப்பட்டது