எரி பட்டு (Eri Silk ) என்பது வடகிழக்கு நேபாளம், சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்றவற்றின் சில பகுதிகளில் காணப்படும் சாமியா சிந்தியா பட்டுப்பூச்சியிலிருந்து தயாரிக்கப்படும் பட்டு வகையாகும்.[1] எரி என்பது சொல் 'சகாப்தம்' என்ற அசாமிய சொல்லில் இருந்து பெறப்பட்டது, அதாவது ஆமணக்கு என்று பொருள்படும், ஆமணக்கு செடியை பட்டுப்புழு உணவாக உட்கொள்கிறது. 'ஆலன்தஸ் பட்டுப்பூச்சி' என்பது இதன் பொது பெயராகும். எரி பட்டு இந்தியாவில் உள்ள எண்டி அல்லது டென்டாடி என்றும் அறியப்படுகிறது. மெல்லிய வெள்ளைப்பட்டு பெரும்பாலும் பட்டுப்புழுவைக் கொல்லாதவாறு தயாரிக்கப்படுகிறது. பட்டுப்புழு அமைத்துக்கொள்ளும் கூட்டை விட்டு அதனை வெளியேற்றி அக்கூடு மட்டும் அறுவடை செய்யப்படுகிறது. இச் செயல்முறையின் முடிவில் இப்பட்டு ஆசிமா பட்டு என்று அழைக்கப்படுகிறது. பாம்பெக்ஸ் மோரியை தவிர அனைத்து வளா்க்கப்பட்ட பட்டுப்புழுவும் எரி பட்டுப்புழு வகையைச் சார்ந்ததாகும்.

செயல்முறை தொகு

எரி கம்பிளிப்பூச்சிகள் கேசரு உள்ளிட்ட பல தாவரங்களை உண்ணுகின்றன. இவை தாய்லாந்தின் 28 மாகாணங்களில் வளர்கின்றன.[1] இந்தியாவின் அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூா், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள சில சிறு நகரங்களிலும் வளா்க்கப்படுகின்றன. இப்பகுதியின் கனமான மழை மற்றும் ஈரப்பதமான வளிமண்டலம் எரி பட்டு வளா்வதற்கு பொருத்தமாக உள்ளது. பெரும்பாலும் மல்பெரி பட்டை விட எரி பட்டு மென்மையாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும். 30 முதல் 32 நாட்கள், கழித்து பட்டுப்புழு அதன் இலைகளுக்கிடையில் வசதியான இடத்தை தேடுகிறது. தாய்லாந்து எரிப்பட்டுப்புழுக்களுக்கு மரவள்ளிக் கிழங்கு இலைகளும், ஆமணக்கு இலைகளும் உணவாக அளிக்கப்படுகிறன.[1]

தரம் தொகு

எரிப்பட்டு ஒரு முக்கிய நார், மற்ற பட்டுப் போல் இல்லாமல் தொடா்ச்சியான இழைகளாக உள்ளது. இதன் நுல் அமைப்பு கடினமானது மற்றும் சிறந்தது ஆகும். எரி பட்டு மற்ற பட்டை விட அடர்ந்த நிறம் கொண்டது மற்றும் கனமான தன்மையை கொண்டது. இதன் வெப்பப் பண்புகள் காரணமாக குளிர்காலத்தில் சூடாகவும், கோடைகாலத்தில் குளிர்ந்தும் இருக்கும்.

பயன்கள் தொகு

எரி பட்டுநூல் என்பது எந்தவொரு உயிரியையும் கொல்வலுவதன் மூலம் தயாரிக்கப்படுவதில்லை. எரி பட்டு ஏழை மக்களின் பட்டு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் தயாரிக்கப்படும் பகுதிகளில் உள்ள அனைவரும் பரவலாக பயன்படுத்துகின்றனா். இது உலகம் முழுவதும் பரவலாகி வருகிறது. இந்தியா, பூட்டான், நேபாளம், சீனா மற்றும் ஜப்பானில் உள்ள பெளத்த பிக்குகள் இதன் அகிம்சை தன்மையா காரணமாக இந்தப் பட்டை விரும்புகின்றனா்.

இந்தியாவில் எரி பட்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குளிர்கால சால்வைகள் தயாரிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. தாய்லாந்தில் எரி பட்டின் வெப்ப பண்புகளால் சால்வைகள், ஜாக்கெட்டுகள், போர்வை மற்றும் படுக்கை விரிப்புகள் போன்றவைகளுக்குப் பயன்டுத்தப்படுகிறது. மேலும் அதன் மென்மையான அமைப்பால் குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கப்படுகிறன. இப்போதெல்லாம் மிகவும் நன்றாக (210 நானோ மீட்டா் வரை) எரி பட்டு நுல் கிடைக்கிறது, இது பாரம்பரிய புடவை உள்ளடங்கிய மிகச் சிறந்த ஆடைகளை நெசவாளா்கள் வடிவமைக்க உதவுகிறது.

எரி பட்டு நீடித்த மற்றும் வலுவான பட்டாக உள்ளது. எனவே திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், மெத்தை உறை போன்ற வீட்டு உபயோகத்தில் பரவலாக பயன்படுத்தலாம்.

ஆந்திராவில் ஹிந்தபூா் மற்றும் அசாமில் உள்ள கோக்ராஜர் ஆகிய இடங்களில் இரண்டு எரி பட்டு ஆலைகள் துவக்கப்பட்டுள்ளன.

எரி பட்டு பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு அமைவானவை என்பதால் இவை இயற்கையாகவே ஊக்குவிக்கப்பகின்றன, மற்றும் எரி வளப்பானது பழங்குடி மக்களுக்கு வேலை மற்றும் வருமானத்தை வழங்குகின்றது.

2007 - 2008 - இல் இந்தியாவில் எரிப்பட்டு உற்பத்தி 1,530 டன்னாகும் இது மொத்த பட்டு உற்பத்தியான 2.075 டனில் 73 விழுக்காடாகும்.

ஆடை வடிவமைப்பாளா்கள் லுசி, டாமம் ஆகியோர் எரி பட்டைப் பயன்படுத்தி திருமன ஆடைகளை வடிவமைக்கின்றனா்.[2][3]

மேலும் காண்க தொகு

பட்டுப்புழு வளர்ப்பு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Wangkiat, Paritta (19 February 2017). "Ericulture reeling them in". Bangkok Post. http://www.bangkokpost.com/news/special-reports/1201117/ericulture-reeling-them-in. பார்த்த நாள்: 19 February 2017. 
  2. "LFW AW13 // Off Schedule // Atelier Tammam". Rewardrobe. பார்க்கப்பட்ட நாள் 23 September 2014.
  3. Jones, Liz. "You can't have a bridal gown without silk - but it's hideously cruel, so what should Kate wear?". Dailymail.co.uk. பார்க்கப்பட்ட நாள் 23 September 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரி_பட்டு&oldid=3236333" இலிருந்து மீள்விக்கப்பட்டது