எழுதுமட்டுவாள்

எழுதுமட்டுவாள், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர்.[1] யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் தென்மராட்சியின் தலைமை நகரமான சாவகச்சேரியில் இருந்து இது ஏறத்தாழ 15 கிலோமீட்டர் தொலைவிலும் யாழ்ப்பாண நகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. எழுதுமட்டுவாளுக்கு மேற்கில் மிருசுவிலும், தெற்கில் கரம்பகமும், கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முகமாலையும், வடக்கில் கடலேரியும் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 33.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுதுமட்டுவாள்&oldid=2853891" இலிருந்து மீள்விக்கப்பட்டது