எஸ். கீதாலட்சுமி

மருத்துவர். எஸ். கீதாலட்சுமி, (பிறப்பு:4 சனவரி 1958) சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 9வது துணைவேந்தரும், இரண்டாவது பெண் துணைவேந்தராக 28 டிசம்பர் 2015 முதல் பணியாற்றியவர். இவர் 3 ஆண்டுகள் துணைவேந்தராக பணியாற்றி 27 டிசம்பர் 2018 அன்று பணி ஓய்வுப் பெற்றவர்.[1][2]

கல்வி & பணிகள் தொகு

இவர் 1974 - 1979ல் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படித்தார். 1985ல் மதராசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் படிப்பில் முதுநிலைப்பட்டம் பெற்றார். இவர் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் இயக்குநராக பணியாற்றியவர். 2007ல் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அடிப்படை அறிவியலியல், நுரையீரல் மூச்சுக்குழாய் ஒவ்வாமை தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கீதாலட்சுமி&oldid=3923889" இலிருந்து மீள்விக்கப்பட்டது