எஸ். ஜி. சுப்பிரமணியன்

இந்திய அரசியல்வாதி

எஸ். ஜி. சுப்பிரமணியன் (S. G. Subramanian) என்பார் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி.டி.வி தினகரனுக்கு விசுவாசமாகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இவரைத் தமிழக சபாநாயகர் ப. தனபால் தகுதி நீக்கம் செய்தார்.[3][4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜி._சுப்பிரமணியன்&oldid=3121253" இலிருந்து மீள்விக்கப்பட்டது