ஏகாட்சர கணபதி

ஏகாட்சர கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 17வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் ஏகாட்சர கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு தொகு

செந்நிற மேனியோடு செம்பட்டாடையுடன் செம்மலர் மாலை அணிந்து முக்கண்ணுடன் பிறையை சூடியிருப்பார். மாதுளம் பழம், பாசம், அங்குசம், வரதம், இவைகளை தாங்கிய கரங்களையுடையவர். யானை முகம் உடையவர். பத்மாசனத்தில் வீற்றிருப்பவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகாட்சர_கணபதி&oldid=1962454" இலிருந்து மீள்விக்கப்பட்டது