ஏ. ஜி. எம். சதக்கா

ஏ. ஜி. எம். சதக்கா (இறப்பு: ஆகத்து 20, 2011) இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமாவார்.

ஏ. ஜி. எம். சதக்கா
இறப்புஆகத்து 20, 2011
ஏறாவூர்
தேசியம்இலங்கை
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

வாழைச்சேனையைச் சேர்ந்த ஸதக்கா பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர். மூன்று பிள்ளைகளின் தந்தை. யாத்ரா சஞ்சிகையின் துணையாசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.

எழுதிய நூல்கள் தொகு

  • இமைக்குள் ஓர் இதயம், கவிதைத் தொகுதி
  • போர்க்காலப் பாடல்கள், கவிதைத் தொகுதி

மறைவு தொகு

ஏறாவூர், சந்திவெளி கிரிமுட்டிபாம் பகுதியில் 2011, ஆகத்து 20 இல் இராணுவ வாகனத் தொடர் அணிக்கு இடமளித்து பாதையை விட்டு ஓரமாகும் சந்தர்ப்பத்தில் அவர் பயணித்த ஈருருளி எதிரே உள்ள மரத்தில் மோதுண்டதில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்[1].

மேற்கோள்கள் தொகு

  1. இலக்கியவாதி சதக்கா விபத்தில் மரணம் பரணிடப்பட்டது 2013-10-09 at the வந்தவழி இயந்திரம், தினகரன், ஆகத்து 22, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜி._எம்._சதக்கா&oldid=3236683" இலிருந்து மீள்விக்கப்பட்டது