கடையம் வில்வவனநாதசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கடையம் வில்வவனநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கடையம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு வில்வவனநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:கடையம், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குளம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:வில்வவனநாதசுவாமி
தாயார்:நித்யகல்யாணி
சிறப்புத் திருவிழாக்கள்:திருவாதிரை
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வில்வவனநாதசுவாமி, நித்யகல்யாணி சன்னதிகளும், அருள்மிகுகன்னி விநாயகர், அருள்மிகுசுப்பிரமணியர், அருள்மிகுதரணிபீடம், அருள்மிகுதட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை,[[தை மாதம்]] தேர்திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. ஆவணி மாதம் திருவிழா நடைபெறுகிறது. காமிகாகம முறைப்படி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)