கருக்கணிகள்

கருக்கணிகள் என்பவை சிற்ப வடிவங்களில் அலங்காரத்திற்காக அமைக்கப்படுகின்ற வடிவமைப்பு ஆகும். ஆடைகளில், அணிகலன்களில், விலங்குகளின் உறுப்புகளை அலங்கரிக்கவும், இந்த கருக்கணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை கோடிப்பாளை என்றும் அழைப்பர்.

வகைகள் தொகு

இந்த கருக்கணிகள் ஒன்பது வகையாக உள்ளன.

  1. சுடர்க் கருக்கு
  2. குதிரைவால் கருக்கு
  3. அன்னவால் கருக்கு அல்லது அன்னவாசல் கருக்கு
  4. கோடிப்பாளைக் கருக்கு
  5. மையப் பாளைக் கருக்கு
  6. கொடிக் கருக்கு
  7. ஓடுக் கருக்கு
  8. வட்டக் கருக்கு
  9. அடைப்புக் கருக்கு
 
சுடர்க் கருக்கு. அழகிற்கு செலுத்தப்படுகின்ற சுடர்கருக்கு.

கோயில்களில் தொகு

நெடுங்களநாதர் கோயிலின் முதல் வகைத் தூண்களின் சதுரங்கள் சிலவற்றில் கருக்குகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன.[1] ஒரு சதுரத்தில் எதிர்ப்பார்வையிலுள்ள இரண்டு தாவுயாளிகள் கருக்கணிகள் உமிழ்கின்ற வண்ணம் உள்ளன.[1] வேறொரு சதுரத்தில் பெண்ணொருவரைக் கருக்கணிக் காரிகையாகக் காட்சிப்படுத்துகிறது.[1]

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1657&Title=Nedungalanathar%20-%202 நெடுங்களநாதர் கோயில் -2 கட்டுரை - இரா.கலைக்கோவன், மு.நளினி. வரலாறு ‌ட ஆட் காம்

வெளி இணைப்புகள் தொகு

சிற்ப செந்நூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருக்கணிகள்&oldid=3698354" இலிருந்து மீள்விக்கப்பட்டது