எடுத்துக்காட்டுதொகு
- ஏந்திசைத் துள்ளல்
முருகவிழ்தா |
மரைமலர்மேன் |
முடியிமையோர் |
புடைவரவே
|
வருசினனார் |
தருமறைநூல் |
வழிபிழையா |
மனமுடையார்
|
இருவினைபோய் |
விழமுனியா |
வெதிரியகா |
தியையரியா
|
நிருமலரா |
யறிவினராய் |
நிலவுவர்சோ |
தியினிடையே.'[3] [4] |
- இந்தப் பாடலில் 'கருவிளங்காய்' என்னும் வாய்பாட்டில் முடியும் வாய்பாட்டுக் காய்ச்சீர் முன் 'நிரை' வந்து தளைந்து நிற்பதால் துள்ளும் ஓசை பெற்றுக் கலித்தளை ஆயிற்று.
- அடியோடு அடி தளையும்போதும் கலித்தளை [5]
- அகவல் துள்ளல்
செல்வப்போர்க் |
கதக்கண்ணன் |
செயிர்த்தெறிந்த |
சினவாழி
|
முல்லைத்தார் |
முடிமன்னர் |
முடித்தலையை |
முருக்கிப்போய்
|
எல்லைநீர் |
இயன்கொண்மூ |
இடைநுழையும் |
மதியம்போல்
|
மல்லலோங் |
கெழில்யானை |
மருமம்பாய்ந் |
தொளித்த்தே [6] [7] |
- இது வெண்சீர் வெண்டளையும், கலித்தளையும் விரவி வந்தமையான் அகவல் துள்ளலோசை
- அடியோடு அடி புணரும்போது வெண்சீர் வெண்டளை [8]
அடிக்குறிப்புதொகு
- ↑ துள்ளிப் குதிப்பது
- ↑ 'துள்ளல் ஓசை கலி' என மொழிப (தொல்காப்பியம் 2-388)
- ↑
- முருகு அவிழ் தாமரை மலர் மேல் முடி இமையோர் புடை வரவே
- வரு சினனார் தரு மறைநூல் வழி பிழையா மனமுடையார்
- இருவினை போய் விழ முனியா எதிரிய காதியை அரியா
- நிருமலராய் அறிவினராய் நிலவுவர் சோதியினிடையே.'
- ↑ யாப்பருங்கலக் காரிகை 22 உரை மேற்கோள்
- ↑ புடைவரவே வருசினத்தார் - கருவிளங்காய் முன் நிரை
- ↑
- செல்வப் போர்க் கதக் கண்ணன் செயிர்த்து எறிந்த சின ஆழி
- முல்லைத் தார் முடி மன்னர் முடித் தலையை முருக்கிப் போய்
- எல்லை நீர் இயல் கொண்மூ இடை நுழையும் மதியம் போல்
- மல்லல் ஓங்கு எழில் யானை மருமம் பாய்ந்து ஒளித்த்தே
- ↑ யாப்பருங்கலக் காரிகை 11 உரை மேற்கோள்
- ↑ சினவாழி முல்லைத்தார - புளிமாங்காய் முன் நேர்