கல்யாணம்பூண்டி ரெங்கநாதசுவாமி கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்

கல்யாணம்பூண்டி அரங்கநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், கல்யாணம்பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:கல்யாணம்பூண்டி, விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விக்கிரவாண்டி
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:அரங்கநாதசுவாமி
தாயார்:அலமேலு அம்மையார்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதாசி
வரலாறு
கட்டிய நாள்:12-16 ஆம் நூற்றாண்டு [சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் 12 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம். பிற்காலச் சோழர்கள் அல்லது பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு பின்னால் வந்த சிற்றரசர்களால் சீரமைக்கப் பட்டிருக்கலாம். செஞ்சி வேங்கட ரமணர் கோவில் கட்டப்பட்டபோது கல்தூண்கள் இந்த கல்யாணம்பூண்டி கிராமத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். இந்த கல்யாணம்பூண்டி அரங்கநாதசுவாமி கோவிலைப் பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் அரங்கநாதசுவாமி, அலமேலு அம்மையார் சன்னதிகளும், ஆண்டாள் உபசன்னதியும் உள்ளன. இக்கோவிலின் மூலவர் பள்ளிகொண்ட பெருமாளாக ஆனந்த சயனத்தில் உள்ளார். இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)