காந்தாமணி கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 61ஆவது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 61ஆவது இராகத்திற்கு குந்தலம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2]

இலக்கணம்

தொகு
 
காந்தாமணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி232 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம23 ரி2
  • இது ருத்ர என்றழைக்கப்படும் 11ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் மாரரஞ்சனி (25) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் பஞ்சம சுரம் முறையே மானவதி (05) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்

தொகு
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி பாலிந்துவோ தியாகராஜர் ஆதி
கிருதி புவனேஷ்வரி பாஹி மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா திரிபுட
கிருதி நாதசுகம் கோடீஸ்வர ஐயர் ஆதி

மேற்கோள்கள்

தொகு
  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தாமணி&oldid=4213788" இலிருந்து மீள்விக்கப்பட்டது