கீர்த்தி சக்கரம்

(கீர்த்தி சக்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கீர்த்தி சக்கரம் (Kirti Chakra) போர்க்களத்தில் அல்லாது ஆற்றப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும் இந்தியப் படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் அசோகச் சக்கரத்திற்கு அடுத்த நிலையிலும் சௌர்யா சக்கரத்திற்கு மேல் நிலையிலும் உள்ள உயரிய விருதாகும். இது படைத்துறையினருக்கு மட்டுமல்லாது குடிமக்களுக்கும் வழங்கப்படக்கூடியது. மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம். இது அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மகா வீர சக்கரம் எனலாம். 1967ஆம் ஆண்டுக்கு முன்னர் அசோகச் சக்கரம், வகுப்பு II என குறிப்பிடப்பட்டது. விருதுகளில் வகுப்புகளை புகுத்திட விரும்பாத இந்திய அரசு கீர்த்தி சக்கரம் எனத் தனிப்பெயரிட்டது.

கீர்த்தி சக்கரம்
விருது குறித்தத் தகவல்
வகை அமைதிக்கால வீரச்செயல்
பகுப்பு தேசிய வீரம்
வழங்கப்பட்டது இந்திய அரசு
முந்தைய பெயர்(கள்) அசோகச் சக்கரம், வகுப்பு II
(1967 வரை)
விருது தரவரிசை
அசோகச் சக்கரம்கீர்த்தி சக்கரம்சௌர்யா சக்கரம்

இரண்டாம் முறையும் அதற்குப் பின்னரும் பெறப்படும் கீர்த்திச் சக்கரா விருதுகளுக்கு விருது நாடாவில் சேர்த்துக் கொள்ள ஆடைப்பட்டயம் வழங்கப்படுகிறது. இதுவரை அவ்வாறு இரண்டாம் முறை எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த விருது பெற்றவர் பிற வீரச்செயல்களுக்காக அசோகச் சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் விருது பெற வாய்ப்புள்ளது.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_சக்கரம்&oldid=3240444" இலிருந்து மீள்விக்கப்பட்டது