கீழாநெல்லி

Chanca piedra
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Phyllanthaceae
பேரினம்:
Phyllanthus
இனம்:
P. niruri
இருசொற் பெயரீடு
Phyllanthus niruri
L
வேறு பெயர்கள் [1]
  • Diasperus chlorophaeus (Baill.) Kuntze
  • Diasperus lathyroides (Kunth) Kuntze
  • Diasperus microphyllus (Mart.) Kuntze
  • Diasperus niruri (L.) Kuntze
  • Diasperus rosellus (Müll.Arg.) Kuntze
  • Niruris annua Raf.
  • Niruris indica Raf.
  • Nymphanthus niruri (L.) Lour.
  • Phyllanthus carolinianus Blanco
  • Phyllanthus chlorophaeus Baill.
  • Phyllanthus ellipticus Buckley nom. illeg.
  • Phyllanthus erectus (Medik.) M.R.Almeida
  • Phyllanthus filiformis Pav. ex Baill.
  • Phyllanthus humilis Salisb.
  • Phyllanthus kirganelia Blanco
  • Phyllanthus lathyroides Kunth
  • Phyllanthus microphyllus Mart. nom. illeg.
  • Phyllanthus mimosoides Lodd. nom. illeg.
  • Phyllanthus moeroris Oken
  • Phyllanthus parvifolius Steud.
  • Phyllanthus purpurascens Kunth
  • Phyllanthus rosellus (Müll.Arg.) Müll.Arg.
  • Phyllanthus williamsii Standl.
  • Urinaria erecta Medik.

கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும்.[2] இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.

இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.

தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ குணங்கள் தொகு

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, பூமியாமலக், பூளியாபாலி என்று பல்வேறு பெயர்களால் மருத்துவர்களால் அழைக்கப்படும் கீழாநெல்லி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானாகவே முளைத்து செழித்து வளர்ந்திருக்கும் கற்ப மூலிகை ஆகும்.

உட்கொள்ளும் முறை: முழுக் கீழாநெல்லிச் செடியைத் தூயநீரில் கழுவி அரைத்துக் கொள்ளல் வேண்டும்.ஐம்பது கிராம் அளவுள்ள விழுதை 200 மி.லி.எருமைத் தயிருடன் கலந்து, காலை 6 மணியளவில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தவிராமல் உட்கொண்டால் மஞ்சட்காமாலை நோய் குணமடையும்.மருந்துண்ணும் நாட்களில் மோரும்,மோர்ச்சோறும் உட்கொள்வது நல்லது. கீழாநெல்லி இலைகளக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்று கிராம் அளவு காலை மாலை இருவேளையும் நான்கு நாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர்த் தொடர்பான நோய்கள் தீரும்.

உசாத்துணை தொகு

  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் June 6, 2014.
  2. Phyllanthus_amarus

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Phyllanthus niruri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழாநெல்லி&oldid=2263837" இலிருந்து மீள்விக்கப்பட்டது