கீழ் பவானி திட்ட கால்வாய்

கீழ் பவானி திட்ட கால்வாய் என்பது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படுள்ள பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் 125 மைல் நீளமுடைய பாசன வாய்க்காலாகும். இதனால் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இக்கால்வாயின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பெருந்துறை அருகில் ஓடும் கீழ் பவானி திட்ட கால்வாய்

முதன்மை கால்வாய் அதிகபட்சமாக 2300 கன அடி நீரை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை கால்வாயிலிருந்து நீரை வயல்களுக்கு கொண்டு செல்லும் வாய்க்கால்களின் மதகு கன அடிக்கு 60 ஏக்கர் பயன்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாய் ஆண்டுக்கு இரு முறை நீர் பெறுகிறது. பொதுவாக ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 15 வரை ஒரு முறையும் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 15 வரை மற்றொரு முறையும் நீர் பெறுகிறது. அணையின் நீர் இருப்பை கணக்கில் கொண்டு நீர் திறக்கப்படும் தேதி மாற்றத்துக்குள்ளாகும்.

பைஞ்சுதைதொகு

கீழ் பவானி கால்வாயில் கான்கரிட் தளம் அமைப்பதற்கு விவசாசிகளிடையே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.[1][2]காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் காரணமாக கீழ்பவானி வாய்க்காலில் விநியோகிக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் எதிர்காலத்தில் கான்கிரீட் கால்வாய் அமைத்தால் மட்டுமே கடைமடைக்கும் நீர் விரைவா சென்றடையும் என்பதால் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கீழ்பவானி முறைநீர் பாசன சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.[3]

வெளி இணைப்புதொகு

http://www.jalaspandana.org/node/21 பரணிடப்பட்டது 2009-12-02 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்தொகு

  1. "கீழ் பவானி பாசன வாய்க்காலில் [[பைஞ்சுதை|காங்கிரீட்]] தளம் அமைக்கும் விவகாரம் – விவசாயிகள் போராட்டம்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. Farmers divided over concrete lining of LGP Canal[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "கீழ்பவானியில் கான்கிரீட் தளம் அமைத்தால்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-21 அன்று பார்க்கப்பட்டது.