குசன் நடனம்

குசன் நடனம் (Kushan dance) அல்லது குஷன் நிருத்யா அல்லது குஷன் கான் என்பது கிருட்டிவாசி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ராஜ்போங்ஷி நாட்டுப்புற நாடக வடிவமாகும். இதில் நடனக் கலைஞர்கள் இராமாயணக் கதையை கம்தாபுரி அல்லது ராஜ்போங்ஷி மொழியில் இசை வசனங்கள் மூலம் விவரிக்கிறார்கள். குசன் நாட்டுப்புற நாடகம் 15ஆம் நூற்றாண்டில் கோச் வம்சத்தினர் அசாம், மேற்கு வங்கம் மற்றும் தற்போதைய வடக்கு வங்காளதேசத்தை ஆண்டபோது கண்டுபிடிக்கப்பட்டது . குசன் என்ற பெயர், சீதையின் இரண்டாவது மகன் குஷ் என்ற பெயரினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[1][2][3]

சொக்ரா அல்லது சோக்ரா என்று அழைக்கப்படும் ஆண்கள், நிகழ்ச்சியின் போது பாடி நடனமாடுகிறார்கள். முதன்மையான நடிகர் மூல் அல்லது கீடல் என்று அறியப்படுகிறார். இவர் கதையை விவரிக்கிறார். டோரி, நகைச்சுவையாளர், வர்ணனைகள், அவதானிப்புகள் மற்றும் நகைச்சுவைகள் மூலம் மூலுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக வேலை செய்கிறார். ஆர் பன்ஷி (மூங்கில் புல்லாங்குழல்), மொண்டிரா, சரிஞ்சா, அக்ராய், வயலின் மற்றும் ஹார்மோனியம் தவிர, மூங்கிலால் செய்யப்பட்ட கருவியான பெனா நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது. கடவுள் மற்றும் தெய்வங்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான ஒரு நல்ல பாடலான அசார் பந்தனாவுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "A struggle for survival for folk performance, Kushan". The Bengal Story - English (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-11. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  2. 2.0 2.1 "Kushan Gaan". INDIAN CULTURE (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  3. 3.0 3.1 A detailed history of Kushan tradition
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசன்_நடனம்&oldid=3657723" இலிருந்து மீள்விக்கப்பட்டது