குப்பிழான் ஐ. சண்முகன்

ஈழத்து எழுத்தாளர்
(குப்பிழான் ஐ. சண்முகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குப்பிழான் ஐ. சண்முகன் (1 ஆகத்து 1946 – 24 ஏப்ரல் 2023) என்பவர் ஓர் ஈழத்து எழுத்தாளர். சிறுகதை, கவிதை, திறனாய்வு, ஆன்மீகம் எனப் பல துறைகளில் எழுதியவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.[1]

குப்பிழான் ஐ. சண்முகன்
பிறப்புஐ. சண்முகலிங்கம்
(1946-08-01)ஆகத்து 1, 1946
குப்பிழான், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
இறப்புஏப்ரல் 24, 2023(2023-04-24) (அகவை 76)
யாழ்ப்பாணம், இலங்கை
இனம்இலங்கைத் தமிழர்
குடியுரிமைஇலங்கையர்
கல்விதெல்லிப்பழை யூனியன் கல்லூரி
பணிஆசிரியர், எழுத்தாளர்
பணியகம்நெல்லியடி மத்திய கல்லூரி
பெற்றோர்இரத்தினம்மா (தாய்)
ஐயாத்துரை (தந்தை)
வாழ்க்கைத்
துணை
புனிதவதி
பிள்ளைகள்சுகன்யா

வாழ்க்கைக் குறிப்பு தொகு

குப்பிழான் ஐ. சண்முகனின் இயற்பெயர் ஐ. சண்முகலிங்கம். இவர் யாழ்ப்பாணம் மாவட்டம், சுன்னாகம், குப்பிழான் என்ற ஊரில் ஐயாத்துரை, இரத்தினம்மா ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] குப்பிழான் வினேசுவரா வித்தியாலயம், புன்னாலைக்கட்டுவன் மெதடித்த மிசன் ஆங்கிலப் பாடசாலை ஆரம்பக் கல்வியையும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் பயின்றார்.[1] பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டம் பெற்றார். 1968 முதல் அரசத் திணைக்களங்களில் எழுத்தராகப் பணியாற்றி, பின்னர் 1984 முதல் 22 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1]

எழுத்துப் பணி தொகு

இவரது முதலாவது சிறுகதை "பசி" ராதா என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆக்கங்கள் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 1975 இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு "கோடுகளும் கோலங்களும்" சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.[1]

உயர்தர வகுப்பு மாணவனாக இருந்த போது இவர் சிலோன் விஜயேந்திரன், மாவை நித்தியானந்தன் ஆகியோரோடு இணைந்து "யாழ் இலக்கியக் கழகம்" என்ற அமைப்பின் மூலமும், பின்னர் ஐ. சாந்தன், அ. யேசுராசா போன்றோரோடு சேர்ந்து "கொழும்பு இலக்கியக் கழகம்" மூலமும் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.[1]

இவரது நூல்கள் தொகு

  • கோடுகளும் கோலங்களும் (சிறுகதைகள் - 1976)
  • சாதாரணங்களும் அசாதாரணங்களும் (சிறுகதைகள் - 1983)
  • அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள் (2003)
  • உதிரிகளும்... (சிறுகதைகள், 2006)
  • ஒரு பாதையின் கதை (சிறுகதைகள், 2012)
  • பிரபஞ்ச சுருதி (கவிதைகள், 2014)
  • ஒரு தோட்டத்தின் கதை (சிறுகதைகள், 2018)

விருதுகள் தொகு

  • சாகித்திய மண்டலப் பரிசு, 1976 ("கோடுகளும் கோலங்களும்" சிறுகதைத் தொகுப்பு)
  • சங்கச் சான்றோர் பட்டம் (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்கம்)

மறைவு தொகு

குப்பிழான் ஐ. சண்முகன் 2023 ஏப்ரல் 24 அதிகாலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 77 ஆவது அகவையில் காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ஜீவநதி சூன் 2022, குப்பிழான் ஐ. சண்முகன் சிறப்பிதழ்
  2. பிரபல எழுத்தாளர் குப்பிழான் சண்முகலிங்கம் காலமானார்!, சமூகம், 24 ஏப்ரல் 2023

வெளி இணைப்புகள் தொகு

தளத்தில்
குப்பிழான் ஐ. சண்முகன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பிழான்_ஐ._சண்முகன்&oldid=3902843" இலிருந்து மீள்விக்கப்பட்டது