கேங்க்ரல் அணை

கேங்க்ரல் அணை (Gangrel Dam) என்பது அதிகாரப்பூர்வமாக பண்டிட் இரவிசங்கர் சாகர் என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் சத்தீசுகரில் அமைந்துள்ளது. இது மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது தம்தரி மாவட்டத்தில் இராப்பூரிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவிலும் தம்தரியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது சத்தீசுகரில் உள்ள மிக நீளமான மற்றும் பெரிய அணையாகும். இந்த அணை ஆண்டு முழுவதும் நீர்ப்பாசனத்தை வழங்குகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் ஆண்டுக்கு இரண்டு பயிர்களை அறுவடை செய்யமுடிகிறது. இந்த அணையிலிருந்து பிலாய் எஃகு ஆலைக்கு நீர் வழங்கப்படுகிறது. இந்த அணையில் 10 மெகாவாட் நீர் மின் ஆற்றலையும் உற்பத்தி செய்யப்படுகிறது.[2]

கேங்க்ரல் அணை
Gangrel Dam
கேங்க்ரல் அணை is located in இந்தியா
கேங்க்ரல் அணை
Location of கேங்க்ரல் அணை
Gangrel Dam in இந்தியா
நாடுஇந்தியா
அமைவிடம்தம்தரி
புவியியல் ஆள்கூற்று20°37′36″N 81°33′36″E / 20.62667°N 81.56000°E / 20.62667; 81.56000
நிலைசெயலில்
திறந்தது1979
அணையும் வழிகாலும்
வகைகட்டுக்கரை, மண்நிரப்பு
தடுக்கப்படும் ஆறுமகாநதி ஆறு
உயரம்30.5 m (100 அடி)
நீளம்1,830 m (6,004 அடி)
கொள் அளவு1,776,000 m3 (2,322,920 cu yd)
வழிகால் அளவு17,230 m3/s (608,472 cu ft/s)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்இரவிசங்கர் நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு910,500,000 m3 (1.190889039×109 cu yd)
செயலில் உள்ள கொள் அளவு766,890,000 m3 (1.003054250×109 cu yd)
மேற்பரப்பு பகுதி95 km2 (37 sq mi)[1]
இயல்பான ஏற்றம்333 மீ (1,093 அடி)

ஒனகோனா, இந்த நீர்த்தேக்கத்தின் கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "National Register for Large Dams" (PDF). India: Central Water Commission. 2009. pp. 194–197. Archived from the original (PDF) on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 30 November 2011.
  2. Chhattisgarh: Gangrel Dam water released into Mahanadi

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேங்க்ரல்_அணை&oldid=3781380" இலிருந்து மீள்விக்கப்பட்டது