கே. ஆர். திருவேங்கடசாமி

தமிழக எழுத்தாளர்

கே. ஆர். திருவேங்கடசாமி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசிக்கு அருகிலுள்ள சிற்றூரில் பிறந்த இவர் மேற்கு ஜெர்மனியில் பொறியியல் பட்டமும், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நீர்வள மையத்தில் பணியாற்றினார். தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு, டச், ஸ்பானிசு முதலிய மொழிகள் அறிந்தவர். தாய்மொழி வழியில் கல்வி கற்றவர்களுக்கே ஆழ்ந்த சிந்தனையும், சுடர்மிகு அறிவும் வாய்க்கும் என்ற கருத்துடையவர். இவர் “வாணிபமும் வேளாண்மையும்”, “நீரும் நிலமும்” முதலிய நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “நிலநீர் அறிவியல் (பாகம் 1 & 2)” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொறியியல், தொழில்நுட்பம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._திருவேங்கடசாமி&oldid=3614090" இலிருந்து மீள்விக்கப்பட்டது