கே. எஸ். ஆனந்தன்

ஈழத்து எழுத்தாளர்

கே. எஸ். ஆனந்தன் (கார்த்திகேசு சச்சிதானந்தம், மார்ச் 30, 1940 – நவம்பர் 18, 2021) ஈழத்து எழுத்தாளர். பல சிறுகதைகள், புதினங்களைப் படைத்தவர். நாடகத்துறையிலும் ஈடுபட்டவர்.

கே. எஸ். ஆனந்தன்
பிறப்புகார்த்திகேசு சச்சிதானந்தம்
(1940-03-30)30 மார்ச்சு 1940
கோண்டாவில், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புநவம்பர் 18, 2021(2021-11-18) (அகவை 81)
இணுவில், யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விஇணுவில் சைவ மகாஜனா வித்தியாலயம்,
நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி,
கொக்குவில் இந்துக் கல்லூரி
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி
பணிவிவசாயி, எழுத்தாளர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்கார்த்திகேசு

வாழ்க்கைக் குறிப்பு தொகு

யாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட கே. எஸ். ஆனந்தன் இணுவில் சைவ மகாசனா வித்தியாலயம், நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று, பட்டப்படிப்பை வெளிவாரியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றார்.[1]

இவரது ஆக்கங்கள் தொகு

இருபத்து நான்கு நாவல்களை எழுதியுள்ளார். ஒன்பது நாடகங்களை மேடையேற்றியுள்ளார். கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம், மற்றும் பல ஈழத்து இதழ்களிலும் பத்திரிகைகளிலும் இவரது சிறுகதைகளும் புதினங்களும் வெளிவந்துள்ளன. இவரின் பத்து புதினங்கள் நூல்களாக வெளிவந்தன.[1]

  • உறவும் பிரிவும் (1964)
  • தீக்குள் விரலை வைத்தால் (1972)
  • மர்மப்பெண் (1974)
  • கர்ப்பக் கிருகம் (1974)
  • காகித ஓடம் (1974)
  • சொர்க்கமும் நரகமும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)
  • கனலும் புனலும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)
  • அமராபுரி இளவரசனின் அற்புத சாகசங்கள் (சிறுவர் புதினம், 2011)

விருதுகளும் சிறப்புகளும் தொகு

  • கலாபூசணம் பட்டம்
  • சிறுவர் இலக்கியத்திற்காக யாழ் இலக்கிய வட்டம் இவரைக் கௌரவித்தது.[1]
  • நாடகத்திற்காக அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் இவருக்கு தங்கப் பதக்கம் பரிசளித்தது.[1]

மேற்கோள்கள் தொகு

தளத்தில்
கே. எஸ். ஆனந்தன் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 1.3 "எழுத்தாளர் கே. எஸ். ஆனந்தன்". Archived from the original on 2015-06-08. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._ஆனந்தன்&oldid=3641293" இலிருந்து மீள்விக்கப்பட்டது