கொத்தகொண்டா யாத்திரை

தெலுங்கானா மாநிலத்தில் மகர சங்கராந்தியின் போது கொண்டாடப்படும் ஒரு திருவிழா

கொத்தகொண்டா யாத்திரை அல்லது கோத்தகொண்ட வீரபத்ர சுவாமி பிரம்மோத்சவம் என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மகர சங்கராந்தியின் போது கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். [1]

கொத்தகொண்டா யாத்திரை
கொண்டாட்டங்கள்3 நாட்கள்
நிகழ்வுவருடந்தோறும்

கரீம்நகர் மாவட்டம் பீமதேவர்பள்ளே மண்டலத்தில் உள்ள கோத்தகொண்டா கிராமத்தில்   இருந்து இந்த திருவிழா யாத்திரை தொடங்குகிறது. [2]

வரலாறு:

அழகிய மலைகளால் சூழப்பட்டுள்ள கோதகொண்டா,  ஸ்ரீ வீரபத்ர சுவாமிக்கு (சிவபெருமானின் அவதாரம்) அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற கோவிலைக்கொண்டு நாடு முழுவதும் அறியப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்திற்காக நாடு முழுவதும் அறியப்பட்ட புகழ்பெற்ற முல்கனூர் கிராமத்திலிருந்து வெறும் 5 கி.மீ தான் அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் திரு. பி.வி.நரசிம்ம ராவ் தனது வாழ்நாளில் இந்த கூட்டுறவு சங்கத்திற்கு தலைமை தாங்கினார்.

கோதகொண்டா கிராமத்தை ஒட்டியுள்ள பாறை மலையில் காகதியர்களின் கட்டிடக்கலையை ஒத்த பெரிய கோட்டையின் இடிபாடுகள் உள்ளன. இம்மலையின் மேல் ஐந்து குளங்கள் உள்ளன. இவற்றில் இரண்டில் கடும் வறட்சி நிலையிலும் தண்ணீர் வற்றாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் தான் வீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மூன்று நாள் கொண்டாடப்படும்  கோதகொண்டா யாத்திரை திருவிழாவிற்கு  தெலுங்கானா பகுதி முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.

அமைப்பு தொகு

வீரபத்ர ஸ்வாமியின் உக்கிரமான தோற்றம் கொண்ட கடவுளின் இருபுறமும் கேத்தம்மா மற்றும் மெடலம்மாவுடன் கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Festivals » Kothakonda Temple".
  2. "Kothakonda Jatara 2016 Dates". 15 January 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Kothakonda-Jatara-begins/article15144395.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தகொண்டா_யாத்திரை&oldid=3661544" இலிருந்து மீள்விக்கப்பட்டது