கோட்டக்கல் பூரம்

கேரளத்தின், மலப்புறம் மாவட்டம் கோட்டக்கல்லில் நடக்கும் கோயில் திருவிழா

கோட்டக்கல் பூரம் (Kottakkal pooram) என்பது இந்தியாவின், கேரளத்தில், உள்ள மலப்புறம் மாவட்டம், கோட்டக்கல்லின் விஸ்வம்பரர் கோயிலில் நடக்கும் கோயில் திருவிழா ஆகும்.

தன்வந்தரி தொகு

மருத்துவம் மற்றும் நலவாழ்வுக்கான கடவுளான தன்வந்தாரிக்கான திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது. [1]

நிகழ்ச்சிகள் தொகு

திருவிழாவில் நடைபெறும் பிரமாண்ட கொண்டாட்டங்களில் பிரபல கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கும். விழா நடக்கும் ஏழு நாட்களில், நாட்டின் பிரபல பாரம்பரிய கலைஞர்கள் இங்கு தங்கள் கலைகளை நிகழ்த்துவார்கள் [2] . கலாச்சார நிகழ்ச்சிகளில் குறிப்பாக கதகளி, மோகினியாட்டம் ஆகியவை அடங்கும் [3]

குறிப்புகள் தொகு

  1. Kerala tourist spot.
  2. Malappuram arts and culture
  3. "Kottakkal Pooram begins today". The Hindu. 2016-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டக்கல்_பூரம்&oldid=3320613" இலிருந்து மீள்விக்கப்பட்டது