கோட்லா ஜெயசூர்ய பிரகாச ரெட்டி
கோட்லா ஜெயசூர்ய பிரகாஷா ரெட்டி (Kotla Jayasurya Prakasha Reddy) (பிறப்பு 18 செப்டம்பர் 1951) இந்தியாவின் 15 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] மேலும் இவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
கோட்லா ஜெயசூர்ய பிரகாச ரெட்டி | |
---|---|
இரயில்வே அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கோட்லா ஜெயசூர்ய பிரகாச ரெட்டி | |
மத்திய இணை அமைச்சர், இந்திய இரயில்வே அமைச்சகம் | |
பதவியில் 28 அக்டோபர் 2012 – 26 ஜனவரி 2014 | |
பின்னவர் | மனோஜ் சின்கா |
தொகுதி | கர்நூல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 செப்டம்பர் 1951 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கே. சுஜாதா |
பிள்ளைகள் | 1 மகன், 2 மகள்கள் |
வாழிடம் | கர்நூல் |
As of 16 September, 2006 மூலம்: [permanent dead link] |
ஆரம்ப கால வாழ்க்கை தொகு
இவர் ஐதராபாத்தில் சியாமளா தேவி மற்றும் முன்னாள் முதல்வர் கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஐதராபாத்து நிசாம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
தொழில் தொகு
ரெட்டி, முதன்முதலில் 1991 இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் முறையே 14 மற்றும் 15 வது மக்களவைக்கு கர்நூல் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார்.