சக்தி அருளானந்தம்

அருள்மொழி (பிறப்பு 1962) என்பவர் சக்தி அருளானந்தம் (Sakthi Arulanandam) என்ற புனைபெயரில் அறியப்படுகிறார்.[1] இவர் ஓர் இந்தியச் சுற்றுச்சூழல் பெண்ணியவாதி, கவிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர் ஆவார்.[2] [3] இவர் தனது கவிதைக்காகத் தஞ்சை பிரகாஷ் விருது, சிகரம் விருது, திருப்பூர் அரிமா சக்தி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்.[4] அருளானந்தம் வெற்றிகரமான கலைஞர், இவரது ஓவியங்கள் பல சிறு பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன.[1] தி இந்துவின் கூற்றுப்படி, இவரது உழைக்கும் வர்க்கப் பின்னணி, உழைப்புக்கான கண்ணியம் மற்றும் கலை மீதான ஆர்வம் மற்றும் கருத்துகளின் உலகம் ஆகியவை தமிழ் இலக்கியத்திற்கான இவரது பங்களிப்புகளில் ஒரு செல்வாக்கு முத்திரையைப் பதித்துள்ளன.

வாழ்க்கை தொகு

அருள்மொழி தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை கிராமத்தில் பிறந்தார். இவர் திருமணமாகாத நிலையில் பிழைப்புக்காக மின் பழுதுபார்க்கும் தொழிலாளியாக மாறினார்.[1][4] அருள்மொழி, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தனது தாயார் இறந்த பிறகு, வீட்டு வேலைகளில் உதவுவதற்காகப் பள்ளியை விட்டு வெளியேறினார். இந்தச் சேவையைப் பின்பற்ற விரும்பாததால் திருமணமாகாமல் இருக்க முடிவு செய்ததாகக் கூறுகிறார். ஜெயகாந்தன், அகிலன் போன்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொடர்ந்து படித்து வந்த இவர், 10ஆம் வகுப்பை (இடைநிலைக் கல்வி) முடித்த பின்னர் தட்டச்சுப் பணியினை முடித்தார். இதே நேரத்தில், ஒரு மின் பழுதுபார்க்கும் கடையில் உதவியாளராக வேலை செய்யத் தொடங்கினார். கடைசியில் பழுதுபார்ப்பது எப்படி என்பதைத் தானே கற்றுக்கொண்டாள். ஓய்வு நேரத்தில் எழுதுதல் மற்றும் வரைதல் பணிகளைச் செய்தார். இவரது முதல் கவிதைகள் மாலை மலரில் வெளிவந்தன.[1] சனவரி 2019 நிலவரப்படி, அருளானந்தம் தனது மூன்று கவிதைத் தொகுப்புகளையும் இருபத்தைந்து சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளார்.[1]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகு

  • இருண்மையிலிருந்து (இருளிலிருந்து)
  • பறவைகள் புறக்கணித்த நகரம் (பறவைகளால் வெறிச்சோடிய நகரம்)
  • தொடுவானமத்திர கடல் (தொடுவானமில்லாத பெருங்கடல்)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Srilata, K.; Rangarajan, Swarnalatha (4 January 2019). "We have become incapable of holding the trust of birds, says this 'green' writer". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
  2. Sriram, Abhirami Girija (30 August 2019). "Mapping herstories" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
  3. Akila (23 December 2017). "நவீன கவிதைகளில் பெண்ணியம்". Keetru. பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
  4. 4.0 4.1 Velayuthan, Kasu (31 August 2019). "எலெக்ட்ரிகல் கடையில் இலக்கியப் பெண்மணி!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_அருளானந்தம்&oldid=3683957" இலிருந்து மீள்விக்கப்பட்டது