சதார் பசார் விளையாட்டரங்கம்

இந்தியாவின் ஆக்ராவிலுள்ள விளையாட்டரங்கம்

சதார் பசார் விளையாட்டரங்கம் (Sadar Bazar Stadium ) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ரா நகரில் அமைந்துள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கமாகும். துடுப்பாட்டம், கால்பந்தாட்டம் மற்றும் இதர விளையாட்டுகள் இங்கு பிரதானமாக நடைபெறுகின்றன. [1] இந்த அரங்கத்தில் 1934 ஆம் ஆண்டில் 17 ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. [2] ஒருங்கிணைந்த மாகாண துடுப்பாட்ட அணி தில்லி துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய ரஞ்சிக் கோப்பை போட்டியில் தில்லி தனது முதலாவது இன்னிங்சில் 37 ஓட்டங்களுக்கு அனைத்து ஆட்டக்காரர்களையும் இழந்தது.[3]. 1966 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை மேலும் 16 போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. ஆனால் அதன் பின்னர் அரங்கத்தில் எந்த துடுப்பாட்ட போட்டியும் நடைபெறவில்லை.

சதார் பசார் விளையாட்டரங்கம்
Sadar Bazar Stadium
முழு பெயர் சதார் பசார் விளையாட்டரங்கம்
இடம் ஆக்ரா, இந்தியா
எழும்பச்செயல் ஆரம்பம் 1934
திறவு 1934
சீர்படுத்தது 1993
உரிமையாளர்
குத்தகை அணி(கள்) உத்தரப்பிரதே துடுப்பாட்ட அணி
(1966-1987)
அமரக்கூடிய பேர் 5,000

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு