சதுரக்கள்ளி

சதுரக்கள்ளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. antiquorum
இருசொற் பெயரீடு
Euphorbia antiquorum
L.

சதுரக்கள்ளி (Euphorbia antiquorum) என்பது கள்ளி இனத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது தமிழகத்தில் வேலிக்காக வளர்க்கப்படுகிறது. முப்பட்டையான தண்டுகளை அடுக்கடுக்காகக் கொண்டிருக்கும். மருத்துவக் குணத்தில் சிறந்த நாற்பட்டையான தண்டுடைய இனமும் அரிதாகக் காணப்படும். இதன் சாறு பால் போன்றது. உடலில் பட்டால் எரிச்சலூட்டும் தன்மைவாய்ந்தது. இது நச்சு மூலிகையாகக் கருதப்படுகிறது.[1]திருப்புனவாயில் என்னுந் திருத்தலத்தில் தலமரமாக விளங்கும் நான்கனுள் சதுரக்கள்ளியும் ஒன்றாகும்.[2]

மேற்கோள் தொகு

  1. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.62
  2. http://www.shaivam.org/sv/sv_sadurakkalli.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரக்கள்ளி&oldid=3854010" இலிருந்து மீள்விக்கப்பட்டது