சதுரங்கா

இந்திய எழுத்தாளர்

சதுரங்கா (Chaduranga; கன்னடம்: ಚದುರಂಗ) என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட சுப்பிரமணியராஜா அரசு (1916 – 19 அக்டோபர் 1998) கன்னட மொழியில் எழுதிய ஓர் இந்திய எழுத்தாளராவார். இவர் சர்வமங்கலா, உய்யாலே, வைஷாகா, மற்றும் ஹெஜ்ஜாலா ஆகிய நான்கு புதினங்களையும் , சில சிறுகதைகளையும் எழுதினார். சதுரங்கா 1968ஆம் ஆண்டில் தனது "சர்வமங்கலா" கதையை தழுவி ஒரு திரைப்பதிப்பை இயக்கிருந்தார். அதே நேரத்தில் 1969ஆம் ஆண்டில் "உய்யாலே" அதே பெயரில் ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டது. [2]

சதுரங்கா
பிறப்புசுப்பிரமணியராஜா அரசு
1916 (1916)
இறப்பு19 அக்டோபர் 1998 (அகவை 81–82)[1]
மைசூர், இந்தியா

விருதுகள் தொகு

சதுரங்காவுக்கு 1982ஆம் ஆண்டில் மாநில சாகித்திய அகாதமி விருதும்,[3] கர்நாடக மாநில இராஜ்யோத்சவ விருதும், இவரது 'வைசாகா' நூலுக்கு மத்திய சாகித்ய அகாடமி விருதும் 1993இல் மைசூர் பல்கலைக்கழகத்தால்[4] கௌரவ மருத்துவர் பட்டமும் வழங்கப்பட்டது. மண்டியாவில் நடைபெற்ற 7வது அகில இந்திய கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராகவும் இருந்தார்.

இறப்பு தொகு

சதுரங்கா, 1998 அக்டோபர் 19 அன்று தனது எண்பத்திரண்டு வயதில் மைசூரில் காலமானார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Noted Kannada writer dead". The Tribune. 21 October 1998. பார்க்கப்பட்ட நாள் 15 April 2017.
  2. https://m.youtube.com/watch?v=Whj5XqRzgAI&feature=youtu.be
  3. http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10307.htm#kannada பரணிடப்பட்டது 26 ஆகத்து 2009 at the வந்தவழி இயந்திரம்
  4. "Personalities of Mysore". Archived from the original on 21 August 2008.
  5. "Noted Kannada writer dead". The Tribune. 21 October 1998. பார்க்கப்பட்ட நாள் 15 April 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்கா&oldid=3159342" இலிருந்து மீள்விக்கப்பட்டது