சந்தேக நபர் (திரைப்படம்)

சந்தேக நபர் (Suspect X) என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழி திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் ஹரொஜி நிசிடனி (Hiroshi Nishitani) என்பவர் ஆவார். இத்திரைப்படத்தின் கதை ஜப்பனிய எழுத்தாளர் கெய்கோ கிகாஷினோ என்பவரின் த டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற புதினத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்
DVD cover (Hong Kong release)
இயக்கம்ஹரோஜி நிஹிதானி
மூலக்கதைThe Devotion of Suspect X
படைத்தவர் Keigo Higashino
திரைக்கதைஎசுசி பொகுடா
விநியோகம்டோகு
வெளியீடுஅக்டோபர் 4, 2008 (2008-10-04)
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஜப்பான்
மொழிஜப்பானிய மொழி
மொத்த வருவாய்$54,826,455[1]

கதை தொகு

கணித ஆசிரியரான டெட்ஷியா இஷிகாமி சமூகத்துடன் சேராமல் வாழும் மனிதர், விவாகரத்து பெற்று தனியாக ஒரு மகளை வைத்துக்கொண்டு உணவு விடுதி நடத்தி வரும் யாசுகோ ஹனவோகா ஆகியோரின் காதல் கதையை மென்மையாக சொல்லப்பட்டுள்ளதுவே, இந்தப் படத்தின் கதை. தனது காதலியின் முன்னால் கணவனின் தொல்லை தாங்க முடியாமல் காதலியும் மகளும் சேர்ந்து கொலைசெய்வதை பார்த்துவிட்ட கணித ஆசிரியர் தனது கணிதத்தின் மூலமே காப்பாற்ற நினைக்கிறார். திரைப்படத்தில் காதலனும் காதலியும் பனிபொழியும் மலை மீது ஏறிச்செல்லும் காட்சி அழகாக படமாக்கப்பட்டு, கதையின் செறிவை தெளிவுபடுத்துகிறது.

வரவேற்பு தொகு

2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் 52,323,944 டாலர்கள் வசூலித்து சாதனை புரிந்தது.[2]

மேற்கோள் தொகு

  1. http://boxofficemojo.com/movies/intl/?page=&id=_fYGISHAXNOKENSHI01
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2014-06-27.

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தேக_நபர்_(திரைப்படம்)&oldid=3552886" இலிருந்து மீள்விக்கப்பட்டது