சானூர் தொல்லியல் களம்

சானூர் தொல்லியல் களம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ஜானகிபுரம் என்ற சானூர் எனும் இடத்தில், புதிய கற்காலம் முதல் துவக்க வெண்கலக் காலம் வரையில் மனிதர்களை புதைக்கும் இடுகாட்டுத் தொல்லியல் களம் ஆகும். [1]இத்தொல்லியல் களத்தை 1950 மற்று 1952-ஆம் ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் சென்னை வட்டத்தின் கண்காணிப்பு தொல்லியலளார் கே. வி. சௌந்தரராஜன் ஆவார். சானூர் தொல்லியல் களத்தின் அகழாய்வு அறிக்கையை கே. வி. சௌந்தரராஜன் மற்றும் என். ஆர். பானர்ஜி வெளியிட்டனர்.[2]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சானூர்_தொல்லியல்_களம்&oldid=3297749" இலிருந்து மீள்விக்கப்பட்டது