சாரங்கதர் தாஸ்

இந்திய செயல்பாட்டாளர்

சாரங்கதர் தாஸ் (Sarangadhar Das;1886-1957) ஒரு இந்திய தேசியவாத புரட்சியாளரும், ஒடிசா அரசியல்வாதியும் ஆவார். [1] தாஸ் ஒரிசாவில் (இன்றைய ஒடிசா ) நிலப்பிரபுத்துவத் தலைவர்களுக்கு எதிராகப் போராடினார். சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராகவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும், சோசலிச கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

சாரங்கதர் தாஸ்
பிறப்பு(1886-10-17)17 அக்டோபர் 1886
தேன்கனல் மாநிலம், பிரித்தானிய இந்தியா
இறப்பு19 செப்டம்பர் 1957(1957-09-19) (அகவை 70)
கட்டக், ஒடிசா, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்ராவென்ஷா கல்லூரி
டோக்கியோ தொழில்நுட்பக் கல்லூரி
கலிபோர்னியா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசுதந்திரப்போராட்ட வீரர்
வாழ்க்கைத்
துணை
பிரிடா ஹாச்ரித்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சாரங்கதர் தாஸ் 1886 இல் தேன்கனலில் ஹரேகிருஷ்ண சுமந்த பட்நாயக்கின் மகனாகப் பிறந்தார்.

கல்வி தொகு

1907 ஆம் ஆண்டில், தேன்கனல் மன்னரின் நிதியுதவியுடன் டோக்கியோ தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்க யப்பானுக்குச் சென்றார். 1909 இல், அமெரிக்காவிற்குச் சென்று பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சர்க்கரை தொழில்நுட்பத்தைப் படித்தார். பின்னர் ஹவாய் தீவின் ஹொனலுலுவிலுள்ள சர்க்கரை ஆலையில் தலைமை வேதியியலாளராக பணியாற்றினார். 1911 இல், பெர்க்லியில் இருந்தபோது, "அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைக்கு வரவிருக்கும் இந்திய மாணவர்களுக்கான தகவல்" என்ற தகவல் ஆவணத்தை வெளியிட்டார். அதில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கான மாணவர் வாழ்க்கை பற்றிய நடைமுறைத் தகவல்களும் ஆலோசனைகளும் அடங்கியிருந்தன.[2]

இந்தியா திரும்புதல் தொகு

இந்தியா திரும்பிய பிறகு, சாரங்கதர் ஒடிசாவில் சர்க்கரை ஆலையை நிறுவ முயற்சித்தார். ஆனால் அம்முயற்சியில் தோல்வியடைந்தார். அப்போது ஆட்சியில் இருந்த நிலப்பிரபுத்துவ தலைவர்களுக்கு எதிராக செயல்பட்டவராக அறியப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை தொகு

1937 முதல் 1946 வரை ஒடிசா மாநில மக்கள் மாநாட்டின் பொதுச் செயலாளராக இருந்தார். 1946 முதல் 1947 வரை ஒடிசா மற்றும் மாநிலங்களின் பிராந்திய அமைப்பின் தலைவராக இருந்தார். 1939-1943 வரை அகில இந்திய மாநில மக்கள் மாநாட்டின் நிலைக்குழு உறுப்பினராகவும், 1947-1948 வரை அதன் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

இவரது அரசியல் வாழ்க்கையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி மற்றும் சோசலிச கட்சி இரண்டிலும் உறுப்பினராக இருந்தார். 1939 முதல் 1945 வரை காங்கிரசு கட்சி உறுப்பினராகவும், 1946 முதல் 1949 வரை ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் பின்னர் காங்கிரசிலிருந்து விலகி சோசலிச கட்சியில் சேர்ந்தார்.

தாஸ் இந்திய அரசியலமைப்பு சபையில் புதிதாக சுதந்திர இந்தியாவின் இந்திய அரசியலமைப்பு மற்றும் தற்காலிக பாராளுமன்றத்தை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இவர் 1951 முதல் 1952 வரை சோசலிச கட்சியின் (உத்கல்) தலைவராகவும், 1952 முதல் 1953 வரை மக்கள் மன்றத்தில் பிரஜா சோசலிச கட்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார் தான் 1957 இல் இறக்கும்போது சோசலிச கட்சியில் இருந்தார் [3]

சான்றுகள் தொகு

  1. "First Lok Sabha Members Bioprofile: Shri Sarangadhar Das". இந்திய நாடாளுமன்றம், மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் July 10, 2021.
  2. "At the University". Echoes of Freedom: South Asian Pioneers in California, 1899-1965. University of California, Berkeley Libraries.
  3. "Echoes of Freedom: South Asian Pioneers in California, 1899-1965". The Library, University of California, Berkeley. பார்க்கப்பட்ட நாள் 21 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரங்கதர்_தாஸ்&oldid=3793120" இலிருந்து மீள்விக்கப்பட்டது