சிந்தியா படித்துறை

சிந்தியா படித்துறை (ஆங்கிலம்: Scindia Ghat; இந்தி: सिंधिया घाट) என்பது வாரணாசியில் உள்ள படித்துறைகளில் ஒன்றாகும். இதன் எல்லைகளாக மணிகர்ணிகா படித்துறை,[1] இந்து தகன இடம் வடக்கே உள்ளது. இந்தப் படித்துறையில் சாய்வான சிவன் (இரத்தனேசுவரர்) கோயில் கங்கை நதியில் ஓரளவு நீரில் மூழ்கி இருப்பதைக் காணலாம். இதனால் இந்தப் படித்துறை பிற படித்துறைகளிலிருந்து வேறுபாடுடையது.[2] மேலும் இந்த படித்துறை அதிக எடை காரணமாகக் கீழே சரிந்தது என்று வாதிடப்படுகிறது. இந்த படித்துறை 1830ஆம் ஆண்டில் கட்டப்பட்டு சிந்தியாவின் பெயரிடப்பட்டது. படித்துறையின் மேற்பகுதியில், வாரணாசியின் சிறப்புமிகு ஆலயங்களான சித்த சேத்ரம், குறுகிய சந்துகளின் இறுக்கமான பகுதியில் அமைந்துள்ளது. புராணங்களின்படி, நெருப்பின் இந்து கடவுளான அக்னி இங்குப் பிறந்தார். இந்து பக்தர்கள் இந்த இடத்தில் வீரேசுவரரிடம் மகன் வேண்டி கோரிக்கை முன்வைக்கிறார்கள்.

சூரிய உதயத்தில் சிந்தியா படித்துறை, ஜூலை 2007.

மேற்கோள்கள் தொகு

  1. David Abram; Rough Guides (Firm) (2003). The Rough Guide to India. Rough Guides. பக். 313–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84353-089-3. https://books.google.com/books?id=kAMik_6LbwUC&pg=PA313. 
  2. "Scindia Ghat Varanasi". tour-my-india. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தியா_படித்துறை&oldid=3598474" இலிருந்து மீள்விக்கப்பட்டது