சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியவர்கள்

சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியவர்கள் என்று சிலரை நன்னூல் அடையாளம் காட்டுகிறது.

சிறப்புப்பாயிரம் செய்தற்குத் தகுதியானவர் தொகு

ஒரு நூலுக்கு சிறப்புப் பாயிரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என நன்னூலில் குறிப்பிடப்படுவோர்:

நூலை எழுதிய ஆசிரியனின் ஆசிரியர், நூலாசிரியனுடன் உடன் கல்வி பயின்றவர், நூலாசிரியனின் மாணவர், நூலாசிரியனின் நூலுக்கு உரை எழுதியவர் என்று சொல்லப்பட்ட இந்நால்வருள் ஒருவர் நூலுக்குரிய சிறப்புப் பாயிரம் எழுதுவதே முறையாகும்”.[1]

அடிக்குறிப்புகள் தொகு

  1. தன்னா சிரியன் றன்னொடு கற்றோன்
    தன்மா ணாக்கன் றகுமுரை காரனென்
    றின்னோர் பாயிர மியம்புதல் கடனே. - நன்னூல் 53

வெளி இணைப்புகள் தொகு