திருக்குறள் பழைய உரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
திருக்குறள் பழைய உரைகள்
திருக்குறளுக்குப் பத்து பேர் உரை உள்ளது எனப் பழம்பாடல் ஒன்று கூறுகிறது.
:தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
:பரிதி பரிமே லழகர்-திருமலையர்
:மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு
:எல்லையுரை செய்தார் இவர்
இவர்களில் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள் ஆகிய ஐவர் உரைகள் வெளிவந்துள்ளன. தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர் ஆகிய ஐவர் உரைகளும்
கிடைக்கவில்லை.
* திருக்குறள் உரைவளம், தண்டபாணி தேசிகர் பதிப்பு,
*திருக்குறள் உரைக்கொத்து, ஸ்ரீ காசிமடம், திருப்பனதாள் பதிப்பு
கிடைத்துள்ள உரைகள் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்னும் பொதுவான கருத்து உண்டு. <br />
இவற்றில் பழமையானது மணக்குடவர் உரை. இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு. <br />
பரிதியார் உரை 14ஆம் நூற்றாண்டு.<br />
ஏனைய மூவர் உரையைப் பரிமேலழகர், காலிங்கர், பரிதியார் எனக் கால வரிசைப்படுத்தலாம். <br />
பரிதியார் உரை காலிங்கர் உரையைத் தழுவிச் செல்கிறது.
 
தாமத்தர், நச்சர், தருமர் உரைகள் கடவுள் வாழ்த்து “இருள்சேர் இருவினையும் சேரா”, “பொறிவாயில் ஐந்தவித்தான்” ஆகிய இரண்டு பாடல்களுக்கு மட்டும் தமிழ்ப்பொழில் மாத இதழிலும், பிற பதிப்புகளிலும் வெளியாகியுள்ளன.
==கருவிநூல்==
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்_பழைய_உரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது