யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "உணவு" (using HotCat)
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 26:
* காலை உணவு
* மதிய உணவு
* இரவு உணவு
 
எனப்படுகின்றன. காலை உணவுக்கு முன்னரும், மேலும் மூன்று உணவு நேர இடைவெளிகளில் இருமுறையும் தேநீர் அல்லது காப்பி அருந்துகிறார்கள்.
வரிசை 39:
 
==யாழ்ப்பாணத்து உணவு வகைகள்==
 
===முதன்மை உணவு===
யாழ்ப்பாணத்து முதன்மை உணவு சோறும் கறியும் ஆகும். யாழ்ப்பாணத்தவர், நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகம் விரும்புகிறார்கள். இதைத் தவிர, நெல்லை அவிக்காமல் குற்றும்போது கிடைக்கும், சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி<ref>இங்கே ''பச்சை என்பது அவிக்காதது (புழுக்காதது) என்பதைக் குறிக்கிறது நிறத்தை அல்ல.</ref> என்பவற்றிலும் சோறு ஆக்குவது உண்டு. தமிழ் நாட்டில் செய்வதுபோல, அரிசியிலிருந்து, புளியோதரை, சாம்பார்சாதம், தயிர்சாதம் என்னும் உணவு வகைகள் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.
 
சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடும் கறி வகைகள் மரக்கறி வகைகளாகவோ, மாமிச உணவு <ref>யாழ்ப்பாணத்தில் சைவ உணவு வகைகளை ''மரக்கறிச் சாப்பாடு'' என்றும், அசைவ உணவு வகைகளை ''மச்சச் சாப்பாடு'' என்றும் குறிப்பிடுவது வழக்கம்.</ref> வகைகளாகவோ இருக்கலாம்.
 
====கறிவகைகள்====
வரி 49 ⟶ 48:
* '''பருப்புக் கடையல்''': தோல் அகற்றப்பட்ட, பயறு, மசூர்ப்பருப்பு, துவரம்பருப்பு போன்றவற்றில் ஒன்றைக் குறைந்த நீரில் அவித்துத் [[தேங்காய்ப் பால்]], [[உப்பு]] மற்றும் சேர்மானங்களுடன், சிறிது நீர்ப்பற்றுள்ளதாகச் செய்யப்படும் கறி இது. சைவச் சாப்பாட்டில் இது முக்கிய இடம் வகிக்கும் ஒரு கறியாகும்.
* '''குழம்பு''': [[கத்தரிக்காய்]], [[வாழைக்காய்]], [[உருளைக்கிழங்கு]],[[பூசனிக்காய்]], [[பாகற்காய்]] போன்ற காய், [[கிழங்கு]] வகைகளில் ஒன்றை முதன்மையாகச் சேர்த்து, தேங்காய்ப் பால், [[மிளகாய்த்தூள்]], [[பழப்புளி]], உப்பு போன்ற சேர்மானங்களுடன் ஆக்கப்படுவது இது. மிளாகாய்த் தூளுக்குரிய சிவப்பு நிறத்தில், கூழ் போன்ற நிலையில் இருக்கும். [[உறைப்பு]]ச் சுவை கொண்டது.
* '''வரட்டல் தூள் கறி''' (கூட்டுக்கறி): குழம்பு ஆக்குவதற்கான சேர்மானங்களே இதற்கும் பயன்படுகின்றன. ஆனால், கறி [[கூழ்]] நிலையில் இல்லாமல் மேலும் வரண்டு, பசை போன்ற கூட்டில் காய்கறிகள் சேர்ந்த நிலையில் இருக்கும். இதுவும் உறைப்புச் சுவை கொண்டதே.
* '''பால் கறி''' (வெள்ளைக் கறி): இதுவும் ஒரு வரட்டல் நிலையிலேயே இருந்தாலும், இதற்கு மிளகாய்த்தூள் சேர்க்கப்படுவதில்லை.
* '''கீரைக் கடையல்''': [[கீரை]]யை அவித்துத் தேங்காய்ப்பாலுடன் கடைந்து செய்யப்படும் இதற்குப் பெரும்பாலும் புளிக்காக எலுமிச்சம் பழச் சாறு சேர்ப்பார்கள்.
* '''வறை''': சேர்மானங்களை தேங்காய்ப் பூவுடன் சேர்த்து, சிறிதளவு எண்ணையுடன் சேர்த்து வறுப்பதன் மூலம் கிடைப்பது வறை ஆகும். இலை வகைகள், [[புடோல்]] போன்ற சில காய் வகைகள் போன்றவை [[வறை]] செய்வதற்குப் பயன்படுகின்றன. ''[[சுறா]]'' போன்ற அசைவ உணவுகளிலும் வறை செய்யப்படுவதுண்டு.
வரி 68 ⟶ 67:
* [[அப்பம்]]: ஒரு நாள் முன்னரே அரிசியை ஊறவைத்து இடித்து நீருடன் கலந்து புளிக்கவிட்டு அப்பம் சுடுவார்கள். வெறுமனே சுடப்படும் அப்பம் ''வெள்ளையப்பம்'' என்றும், சுடும்போது நடுவிலே தேங்காய்ப் பால் ஊற்றிச் சுடப்படும் அப்பம் ''பாலப்பம்'' என்றும் அழைக்கப்படுகின்றது.
* [[தோசை]]: யாழ்ப்பாணத்துக் கிராமப் புறங்களிலே சுடப்படுகின்ற தோசை சிறிது வேறுபட்டது. தோசை மாவுக்குச் சிறிது மஞ்சள் சேர்த்துக் [[கடுகு]], மிளகாயும் தாளித்துச் சேர்ப்பார்கள். தமிழ் நாட்டில் உள்ளது போல் நீர்த் தன்மை கொண்ட ''சட்னி'' யாழ்ப்பாணத்தில் செய்யப்படுவதில்லை. ஆனால் தோசைக்காக வேறு வகையான ''சம்பல்'' யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படுகின்றது. செத்தல் [[மிளகாய்|மிளகாயைப்]] (காய்ந்த மிளகாய்) பொரித்து, அத்துடன், [[புளி]], [[உப்பு]], [[வெங்காயம்]], தேங்காய்ப்பூ சேர்த்து [[உரல்|உரலில்]] இட்டு இடித்துக்கொள்வார்கள். இது சிறிது வரண்டதாகவும், உதிர்கின்ற தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
* அவித்த கிழங்கு வகைகள்: [[மரவள்ளிக் கிழங்கு]] யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் செய்கை பண்ணப்படும் கிழங்கு வகையாகும். கறியாகவும் சமைத்து உண்னப்படும் இக் கிழங்கை அவித்துக் காலை உணவாக உண்பது உண்டு. இக் கிழங்கு குறைந்த வருமான மட்டங்களில் உள்ளவர்களுக்கு மலிவாகக் கிடைக்ககூடிய ஒரு உணவாகும்.
* [[பாண்]] (கோதுமை ரொட்டி): இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, மேனாட்டு உணவு வகையான இது, யாழ்ப்பாணத்தவரால் பரவலாக உண்ணப்படுகின்ற உணவு வகைகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உண்ணுவதற்கான தயார் நிலையிலேயே வருவதாலும், அரச [[மானியம்|மானியங்கள்]] மூலமாகப் பாண் மலிவான விலையில் கிடைப்பதாலும் பலரும் இதை விரும்பி உண்கிறார்கள்.
 
வரி 122 ⟶ 121:
 
* [[பட்டினப் பாலை]] ( 185- 195)
 
 
==குறிப்புகள்==
<References />
 
 
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]
[[பகுப்பு:தமிழர் சமையல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்து_உணவுப்_பழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது