பட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
பட்டர் ஒரு வைணவ இலக்கிய ஆசிரியர். 1123-ஆம் ஆண்டு [[நம்மாழ்வார்]] பிறந்த நாளுக்கு அடுத்த நாள் பட்டர் பிறந்தார். <ref>கலியாண்டு 4424 (கி.பி.1123) வைகாசி விசாகத்தை அடுத்த நாள்</ref> தந்தை [[கூரத்தாழ்வார்]]. தாயார் பெயர் ஆண்டாள். பிறந்தது இரட்டைப்பிள்ளை. இவருடன் அடுத்துப் பிறந்தவர் ஸ்ரீராமபிள்ளை. [[இராமானுசர்]] தம் சீடரான 'எம்பார்' என்பவரை அனுப்பி, இரு குழந்தைகளையுத் எடுத்துவரச் செய்து, மூத்தவருக்குப் 'பராசரப் பட்டர்' என்றும், இளையவருக்கு 'வேதவியாச பட்டர்' என்றும் பெயர் சூட்டிப் பெருமை செய்தார். பிற்காலத்தில் மூத்தவர் 'பெரிய பட்டர்' எனவும், இளையவர் 'ஸ்ரீராம பிள்ளை' எனவும் போற்றப்படலாயினர். பட்டர் என்றாலே பெரிய பட்டரைத்தான் குறிக்கும்.
பட்டர் தன் மனைவி இறந்தபின் மற்றொரு மனைவியை மணந்துகொண்டு வாழ்ந்த இல்லறத்தார். தம் 28-ஆம் அகவையில் மூளை வெடித்து மாண்டார்.
|