இ. அம்பிகைபாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →படைப்புகள்: clean up |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Ambi.jpg|right|thumb|எழுத்தாளர் அம்பி]]
'''இ. அம்பிகைபாகர்''' (கவிஞர் அம்பி, பிறப்பு: [[பெப்ரவரி 17]], [[1929]]) [[ஈழம்|ஈழத்தி]]ன் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். [[1950]] ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர்.
==வாழ்க்கைச் சுருக்கம்==
இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக்கொண்ட கவிஞர் அம்பி இலங்கையில் [[வட மாகாணம், இலங்கை|வடக்கே]] [[நாவற்குழி]]யில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். [[பரி. யோவான் கல்லூரி]]யிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.
==எழுத்துலகில்==
[[தினகரன்]] இதழில் வெளிவந்த ''இலட்சியக் கோடி'' என்ற சிறுகதையின் மூலம் அறிமுகமானவர். தமிழ் நாட்டில் அண்ணாதுரை முதலமைச்சராகவிருந்த காலப்பகுதியில் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். ஈழத்தின் தேசிக விநாயகம்பிள்ளையாக [[சுபமங்களா]] இதழால் வர்ணிக்கப்பட்டவர்.
==சமூகப்பணி==
கொழும்பில் பாடவிதான அபிவிருத்தி சபையில் பணியாற்றியவர். பல பாட நூல்களின் ஆலோசகராக விளங்கியவர். [[அவுஸ்திரேலியா]]வில் தமிழ் மாணவர்களுக்கென பாட நூல்கள் உருவாக்கப்பட்டபோது இவரது ஆலோசனைகளும் பெறப்பட்டன. தலைமுறை இடைவெளி தொடர்பான கருத்தாடல்களுக்கும் இவர் தலைமை வகித்துள்ளார்.
==டாக்டர் கிறீன் குறித்து ஆராய்ச்சி==
இவர் தமிழுக்குச் செய்த அரும்பணிகளில் ஒன்று மருத்துவத் தமிழ் முன்னோடி மருத்துவர் [[சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்|டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீனை]] தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. கிறீனுக்கு [[இலங்கை]] அரசு முத்திரை வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமாக உழைத்தவர். டாக்டர் கிறீன் பற்றி ஆய்வுகள் செய்து பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
==விருதுகள்==▼
* கவிதைக்காக (''கொஞ்சும் தமிழ்'') இலங்கை அரசின் சாகித்திய விருது.▼
== படைப்புகள் ==
வரி 29 ⟶ 28:
* ''A String of Pearls''
* ''பாலர் பைந்தமிழ்''
*''Lingering Memories'' (ஆங்கிலம் மூலம் கற்கும் தமிழ்க்குழந்தைகளுக்கான கவிதை நூல்)
* ''The World Wide Tamils''
*''A String of Pearls''
▲==விருதுகள்==
* உலகத்தமிழாரராய்ச்சி மாநாட்டு விருது (தங்கப்பதக்கம், 1968)
* இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’ (1993)
▲*
* அவுஸ்திரேலியாவில் மெல்பன் ‘நம்மவர்’ விருது (1997)
* கனடாவில் சி.வை. தாமோதரம் பிள்ளை விருது (தங்கப்பதக்கம், 1998)
* அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருது (2004)
இலங்கையில் மல்லிகை, ஞானம் ஆகிய இலக்கிய இதழ்கள் முகப்பில் அம்பியின் உருவப்படத்துடன் அவரது பணியை பாராட்டி கட்டுரை எழுதி கௌரவித்துள்ளன.
==நாடகங்கள்==
அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகம், இலங்கையில் [[தாசீசியஸ்|தாசீசியசின்]] நெறியாள்கையிலும், யாழ்பாடி என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் [[இளைய பத்மநாதன்|இளைய பத்மநாதனின்]] அண்ணாவியத்திலும் அரங்கேறியுள்ளன. அம்பியின் பவளவிழாவை முன்னிட்டு அவரது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் விரிவான ஆய்வு நூல் (அம்பி: வாழ்வும் பணியும்) 2003 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.
==வெளி இணைப்புகள்==
வரி 35 ⟶ 50:
}}
*[http://www.thinakaran.lk/vaaramanjari/2010/04/04/?fn=k1004043 இவ்வார ஆளுமை: எழுத்தாளர் அம்பி], [[தினகரன்]], ஏப்ரல் 4, 2010
*[http://www.tamilmurasuaustralia.com/2012/08/blog-post_7279.html அயராமல் இயங்கி ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நனவிடைதோயும் கவிஞர் அம்பி ஓடிடும் தமிழருக்கு அறைகூவல் விடுத்தவர்], [[லெ. முருகபூபதி]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
|