சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
"சேரமான் யானைகட்சேய் மாந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை [[சேரர் குடிப்பெயர்கள்|சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். [[குறுங்கோழியூர் கிழார்]] என்னும் புலவர் இவனைக் கண்டு இவனது சிற்றபுகளைப் பாராட்டிப் பாடியுள்ளார். <ref>புறநானூறு 20</ref>
கடலின் ஆழம், அண்டத்தின் விரிவு, காற்று வழங்கும் திசை, ஒன்றுமில்லாமல் இயங்கும் ஆகாயம் ஆறியவற்றையெல்லாம் அளந்து அறிந்தாலும் இவனது அறிவு, அன்பு, இரக்க உணர்வு ஆகியவற்றை அளக்க இயலாது.
இவன் நாட்டு மக்களுக்குச் சோறாக்கும் தீ அல்லாமல் வேறு (பகைவர் மூட்டும் தீ) தெரியாது. வானவில்லைத் தவிர வேறு வில் தெரியாது. நிலத்தை உழும் யாஞ்சில் படை அல்லது வேறு படை தெரியாது. இவன் நாட்டு மண்ணை கருவுற்றிருக்கும் மகளிர் உண்டால் ஒழியப் பகைவர் உண்டதில்லை. இவன் நாட்டுக்கு அரண் அம்பு அன்று. அறம். இவன் நாட்டுக்குப் புதிய பறவைகள் வந்தாலும், பழைய பறவைகள் நாட்டிலிருந்து போனாலும் இவன் நாட்டு மக்கள் ‘புள்’ என்னும் சகுனமாகப் பார்க்க மாட்டார்கள். (காரணம் எல்லாம் நலமாகவே நிகழும் இவனது நல்லாட்சி)
இந்தச் செய்திகளால் இவனது நல்லாட்சி புலனாகிறது.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
|