சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"சேரமான் யானைகட்சேய் மாந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை [[சேரர் குடிப்பெயர்கள்|சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். [[குறுங்கோழியூர் கிழார்]] என்னும் புலவர் இவனைக் கண்டு இவனது சிற்றபுகளைப் பாராட்டிப் பாடியுள்ளார். <ref>புறநானூறு 20</ref>
[[மாந்தை]] நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசனை மாந்தரன் என்றனர்.
 
கடலின் ஆழம், அண்டத்தின் விரிவு, காற்று வழங்கும் திசை, ஒன்றுமில்லாமல் இயங்கும் ஆகாயம் ஆறியவற்றையெல்லாம் அளந்து அறிந்தாலும் இவனது அறிவு, அன்பு, இரக்க உணர்வு ஆகியவற்றை அளக்க இயலாது.
குட்டநாட்டில் இளவரசனாயிருந்து பயிற்சி பெற்று அரசனானவன் ‘குட்டுவன்’. அவ்வாறு குடநாட்டிலிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்’. பொறைநாட்டில் ([[பொள்ளாச்சி|பொள்ளாச்சி நாட்டில்]]) அப்படி இருந்து அரசனானவன் பொறையன். இவ்வாறு மாந்தையிலிருந்து அரசனானவன் மாந்தரன்.
 
இவன் நாட்டு மக்களுக்குச் சோறாக்கும் தீ அல்லாமல் வேறு (பகைவர் மூட்டும் தீ) தெரியாது. வானவில்லைத் தவிர வேறு வில் தெரியாது. நிலத்தை உழும் யாஞ்சில் படை அல்லது வேறு படை தெரியாது. இவன் நாட்டு மண்ணை கருவுற்றிருக்கும் மகளிர் உண்டால் ஒழியப் பகைவர் உண்டதில்லை. இவன் நாட்டுக்கு அரண் அம்பு அன்று. அறம். இவன் நாட்டுக்குப் புதிய பறவைகள் வந்தாலும், பழைய பறவைகள் நாட்டிலிருந்து போனாலும் இவன் நாட்டு மக்கள் ‘புள்’ என்னும் சகுனமாகப் பார்க்க மாட்டார்கள். (காரணம் எல்லாம் நலமாகவே நிகழும் இவனது நல்லாட்சி)
'''சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை''' யானை போலப் பெருமித நோக்கு உடையவன் <ref>வேழநோக்கின் விறல் வெஞ் சேய்</ref> <br />
[[கொல்லி]] நாட்டை வென்று தாக்கிக்கொண்டான். <br />
அரசர் பலர் இவனைப் பணிந்து திறை தந்தனராம். <br />
இவன் நாடு நெல்லும் கரும்பும் விளையும் வளம் மிக்கதாம். மக்கள் நெல் குற்றும்போது குரவையாடி மகிழ்வார்களாம். <ref>[[குறுங்கோழியூர் கிழார்]] புறநானூறு 22</ref>
 
தமிழ்நாடு முழுவதும் தன்தொழில் கேட்ப நாடாண்ட சேரவேந்தர் வழிவந்தவன் என இவன் பாராட்டப்படுகிறான். <br />
இவன் [[தொண்டி]] மக்களோடு போரிட்டு வென்றவன். <br />
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இவனைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான். குழியில் விழுந்த யானை குழியை இடித்துக்கொண்டு ஏறி வந்தது போல இந்தப் பொறையன் சிறையைத் தகர்த்துக்கொண்டு தன் நாட்டுக்கு வந்து அரசனானானாம்.<br />
இவன் கொடைமுரசு முழக்கிப் இரவலர்களை வரவழைத்துப் பரிசில் நல்குவானாம். <ref>[[குறுங்கோழியூர் கிழார்]] புறநானூறு 17</ref>
 
இந்தச் செய்திகளால் இவனது நல்லாட்சி புலனாகிறது.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:சேர அரசர்கள்]]