தொல்லியல் துறைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கணிப்பதில் இரும்பின் பங்கும் முக்கியமானது. உலக்த்தில்உலகத்தில் இரும்பு அறிமுகமான காலமாக கருதப்படும் காலத்தை [[இரும்புக் காலம்]] என்கின்றனர். இக்காலம் உலக்த்தின்உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் அமையப்படுகின்றன. இக்காலத்தின் தொடக்கம் மற்றும் முடிவு கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டு தொடங்கி கிருத்து சகாப்தம் தொடங்கும் வரையில் அமைந்தது. தமிழகத்திலுள்ள தொல்லியல் களங்களான [[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்]] மற்றும் [[இரவிமங்கலம் தொல்லியற்களம்]] போன்றவை மிகப்பரந்த பரப்பளவில் இரும்புக்காலத்தின் எச்சங்களை சுமந்து கொண்டிருக்கின்றன.