எலிபண்டா குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: sk:Jaskyne na Elefante
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Elephanta Mahesamurti 1.JPG|thumb|250px|திரிமூர்த்தி-சதாசிவன் சிலை]]
'''எலிபண்டா குகைகள்''', [[மும்பாய்]] கரைக்கு அப்பால், [[மும்பாய்த் துறைமுகம்|மும்பாய்த் துறைமுகப்]] பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. [[போத்துக்கீசர்]] இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் [[யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம்]] என அறிவிக்கப்பட்டது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பக்கிதுப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.
 
இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் [[சிவன்]] சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான [[பிரம்மா]], [[விஷ்ணு]], [[சிவன்]] ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். [[நடராசர்]], [[சதாசிவன்]] ஆகியோரின் [[புடைப்புச் சிற்பம்|புடைப்புச் சிற்பங்களும்]], [[அர்த்தநாரீஸ்வரர்]] சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.
"https://ta.wikipedia.org/wiki/எலிபண்டா_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது