ஆதி சங்கரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: ml:ശങ്കരാചാര്യര്‍ (strong connection between (2) ta:ஆதி சங்கரர் and ml:ശങ്കരാചാര്യൻ)
வரிசை 26:
 
கி.மு நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.
==தத்துவம்==
பார்பணீயத்தை நியாப்படுத்தும் கொள்கையை அளித்த வேதாநதத் தத்துவம். பொதுவாக உலக ஆன்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது. இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது. இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான். நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது. நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது. நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிறுக்கிறது. இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்ததை தவிர வேறெந்த பொருளும் கிடையாது. உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன. ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் உடனடி பிரச்சனைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது. அது தொலைவில் உள்ளது. தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார். ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது. பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கர்ரின் அத்வைதம்.
 
==சமூக தாக்கம்==
வர்த்தகத்திலும், கல்வியிலும் தலைசிறந்து விளங்கிய மாபெரும் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய இந்தியா பின்னர் பின் தங்கியதற்கு ஆதிசங்கரரின் அத்வைத கோட்பாடே காரணம் என்று கூறப்படுகிறது. இவரது ஆன்மா, மற்றும் பிரம்மம் கருத்துக்கள் இந்திய விஞ்ஞான வளர்ச்சியையும், சமுதாய வளர்ச்சியையும் பாதித்தது. மேலும் நாலு வர்ண முறை வேர்விட்டு வளர காரணமாயிர்ந்தது.
 
== துறவறம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆதி_சங்கரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது