மனிதனை சிந்திக்க வைத்த பிரதான விடயங்களில்விஷயங்களில் ஒன்று இந்த பிரபஞ்சம். கோள்களின் இயக்கம். மனிதன் உருவாகி சிந்திக்க தொடங்கிய காலம் முதல் பலர் இதனை விளக்க முயற்சித்த போதும் ஓர் நிலையான முடிவை தந்த விஞ்ஞானி நியூட்டன் ஆவார். அப்பிள் பழம் ஏன் புவியை நோக்கி விழுகிறது என்ற அவரது சிந்தனையே இதற்கு அடிப்படை என்றும் கூறுவார்கள். சூரிய குடும்பத்திலிலுள்ள கோள்களினது இயக்கம் தொடர்பான பெளதிகத்தின் தேடுதலுக்கு இக்கண்டுப்பிடிப்பு ஒரு மைல் கல் ஆகும். அக்காலத்தில் இருந்த பல சர்ச்சைகளுக்கு இவ்விதி விளக்கம் கொடுத்ததுடன் தற்கால செயற்கை உப கோள்களை ஏவுதல் வரையான கணிப்புகளுக்கும் இது பயன்படுகிறது.