::'''enaku thirukural payan and perumai vendum'''--{{unsigned|124.125.36.112}}
ஏதோ ஒரு நூலில் படித்த ஞாபகம்:
1. காமம் (இன்பம்)
2. பொருள்
3. அறம்
இதுவே வள்ளுவர் வகுத்த வரிசை.
இந்த வரிசையின் அர்த்தம்:
ஏ மனிதா முதலாவதாக, கணவனுடன்/மனைவியுடன் காமத்தின் கரையை காண். அதன் பின் இரண்டவதாக பொருளை சம்பாதி. அதன் பின் மூன்றாவதாக, சம்பாதித்த பொருளை வைத்து அறச் செயல்களை செய்.
அறம் செய்ய வேண்டுமென்றால் பொருள்/பணம் வேண்டும்.
பொருள்/பணம் சம்பாதிக்கும் போது காம எண்ணங்கள் குறுக்கிடவே கூடாது.
காம எண்ணங்கள் குறுக்கிடவே கூடாதென்றால், முதலில் காம இச்சையை அனுபவித்து தீர்த்து விடு.
இதுதான் வள்ளுவர் வகுத்த வரிசையின் பொருள்.
காமம் எனும் சொல் அசிங்கமாக பட்டதால் பின்னாளில் அறிஞர்கள் நாகரீகம் கருதி காமத்தை இன்பம் என மாற்றி அதனை கடைசியில் தூக்கி போட்டு விட்டார்கள். அறம் என்பது நல்ல சொல்லாக பட்டதால் அதனை முதலில் தூக்கி போட்டு விட்டார்கள்.
காமம் என்ற சொல் பிறந்ததன் நோக்கம் தான் என்ன? இன்பம் என்ற சொல் பிறந்ததன் நோக்கம் தான் என்ன? காமம் அசிங்கம் அல்ல. அச்சொல் இன்பம் என மாற்றப்படக்கூடாது. இரு சொற்களும் பயன் படுத்தப்பட வேண்டிய இடங்களில் முறையாக பயன் படுத்தப்பட வேண்டும்.
இது சாதாரண வரிசை அல்ல. மனித குல மேம்பாட்டிற்காக தெய்வப்புலவர் வள்ளுவர் வகுத்துக் கொடுத்த வரிசை. முதலில் காமத்தை படியுங்கள், பின்பு பொருளை/பணத்தை சேர்ப்பதை/சம்பாதிப்பதை படியுங்கள், பின்பு அறம் செய்வதை பற்றி படியுங்கள்.