உரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 204 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary |
||
வரிசை 46:
}}
'''ரோம்''' [[இத்தாலி]]யின் தலைநகரம் ஆகும்.உலகில் அழகு என்ற சொல்லுக்கு ரோம் நகரையும் கூறலாம்.ஏனென்றால் ரோமர்கள் அப்படி அந்நகரை வடித்திருப்பர்.'எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே','இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும்' என்னும் வாக்கியங்கள் அதன் சிறப்புக்கு உதாரணம் ஆகும்.ஐரேப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் கலாச்சாரமே வழிகாட்டி ஆகும்.இதுவே இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும். இந்நகரில் சுமார் 2.8 [[மில்லியன்]] மக்கள் வாழ்கிறார்கள்.இந்நகரில் பேசப்பட்டு வந்த லத்தின் மொழியே திரிந்து ஐரேப்பிய கண்டம் முழுவதும் வெவ்வேறு மொழியாக மாறியுள்ளது.ஆனால் தற்போது ரோமர்கள் பேசுவது 'இத்தாலியன்' மெழியாகும்.இந்நகரம் இத்தாலிய மூவலஞ்சூழ் தீவகத்தில் (தீபகற்பத்தில்) நடு மேற்குப் பகுதியில் ''அனியென்'' ஆறானது [[டைபர்]] ஆற்றில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக் கணிப்பின் படி ரோம் மாநகரம் மட்டுமே சுமார் 97 யூரோ (€ 97) பொருள் ஈட்டம் பெற்றது, மேலும் இது இத்தாலிய நாட்டு உற்பத்தியில் 6.7% ஆகும்.
ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ட்ராய் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது அங்கிருந்து ஓடிவந்த மன்னன்,லிதியம் என்கிற ஆற்றின் கரையிலிருந்த வேறொரு மன்னிடம் தஞ்சமடைந்தான்.பிறகு,அம்மன்னனின் மகளையே மணம் செய்து கொண்டான்.அந்த வம்சாவழியில் வந்த ஒரு பெண் ரியா சில்வியா,அவள் செவ்வாய் கிரகத்தால் கருவுற்று இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றாள்.ஆனால்,அந்த நேரத்தில் அவளின் மாமன் அந்த நகரத்தை கைப்பற்றியதால்,தன் குழந்தைகளை காக்க ஒரு கூடையில் அவர்களை வைத்து டைபர் ஆற்றில் வி்ட்டுவிட்டாள்.ஆற்றில் சென்ற குழந்தைகளை ஓநாய் ஒன்று இழுத்து வந்து,தன் பாலை சொறிந்து அவர்களை காத்தது.ஓநாயிடம் இருந்த குழந்தைகளை,அவ்வழியாக சென்ற மாடு மேய்ப்பவன் காப்பாற்றி வளர்த்துவந்தான்.அவர்களே ரேமுல் மற்றும் ரீமஸ்.இதன் அடையாளமாக ஓநாய் பாலூட்டும் இரட்டையர் சிலை ரோமானியா முழுவதும் இடம் பெற்றிறுக்கும்.
<gallery>images.jpeg|
</gallery>
இரட்டையர்களாகிய ரோமுலஸ், ரேமஸ் ஆகியோர் இணைந்து கி.மு. 753ல் ரோம் நகரத்தை நிறுவியதாக ஒரு தொல்மரபு கூறுகின்றது. அகழ்வாராய்ச்சியின் படியும் சுமார் கி.மு 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்து தொடர்ந்து மக்கள் இன்று ரோம் நகரம் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.
|