யாழ்ப்பாணச் சரித்திரம் (இராசநாயகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 36:
வரலாற்றுக்கு முந்திய காலத்தில் [[யாழ்ப்பாணக் குடாநாடு]] ஒரு தனித் தீவாக இருந்தது என்றும் அக்காலத்தில் இத் தீவிலும் இலங்கையின் மேற்குப் பகுதியிலும், [[நாகர்]] எனப்படும் சாதியார் வசித்து வந்ததாகவும், அவர்களின் இராசதானி தற்போது [[கந்தரோடை]] எனப்படும் கதிரமலை என்றும் இந்நூலில் இராசநாயகம் கூறுகிறார்.<ref>இராசநாயகம், செ., 1999. பக். 3</ref> அக்காலத்தில் இலங்கையில் [[இயக்கர்]] என்னும் இன்னொரு சாதியினரும் வாழ்ந்தனர் என்பதும், [[இராமாயணம்|இராமாயணத்தில்]] வரும் [[இராவணன்]] இயக்கர் குலத்தைச் சேர்ந்தவன் என்பதும் அவரது கருத்து. சிங்களவரின் முன்னோனான விசயன் கலிங்கத்தில் இருந்து இலங்கையில் இறங்கி முதலில் இயக்க இளவரசி ஒருத்தியை மணந்து இயக்க அரசைக் கைப்பற்றினான் என்றும், பின்னர் அவளை விலக்கிவிட்டுப் பாண்டிநாட்டு இளவரசியொருத்தியை மணந்தான் என்பதும் மகாவம்சத்தின் கூற்று. இது பொருந்தாது என்பதும், விசயன் யாழ்ப்பாணத்தில் அரசாண்ட நாகர்குல இளவரசியையே மணந்திருக்க வேண்டும் என்பதும் இராசநாயகத்தின் கருத்து.<ref>இராசநாயகம், செ., 1999. பக். 11</ref> இயக்கரும் நாகரும் ''ஈழு'' என்னும் மொழியைப் பேசிவந்தனர் எனவும், இச் சொல்லில் இருந்தே ''ஈழம்'' என்னும் சொல்லும் அதில் இருந்து ''சிங்களம்'', ''செரென்டிப்'', ''சிலோன்'' போன்ற சொற்கள் மருவின என்பதும்<ref>இராசநாயகம், செ., 1999. பக். 11, 12</ref> இந்நூலின் முதல் அதிகாரத்தில் உள்ள சில கருத்துக்கள்.
நாகரின் வழிவந்தவர்கள் 8ஆம் நூற்றாண்டுவரை கதிரமலையில் இருந்து ஆண்டார்கள் என்றும் பின்னர் அவர்கள் வலிமை குன்றியபோது, யாழ்ப்பாணக் குடாநாட்டில், இன்று வல்லிபுரம் எனப்படும் சிங்கைநகரை
==பதிப்புகள்==
|