===மூன்றாவது விதி: ஒவ்வொரு நூலுக்கும் அதன் வாசகர்===
<blockquote>இந்த விதி இரண்டாவது விதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாயினும் இந்தவிதி நூலக உருப்படியில் கவனத்தைச் செலுத்துகிறது. இது, நூலகம் ஒன்றில் உள்ள ஒவ்வொரு நூலுக்கும், அதனைப் பயன்படுத்தக்கூடிய ஒருவர் அல்லது பலர் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். ஒவ்வொரு நூலக உருப்படியும், பொருத்தமான வாசகரைச் சென்றடைவதை உறுதி செய்துகொள்வதற்கு, ஒரு நூலகம் பல வழிமுறைகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்பது அரங்கநாதனின் வாதம். ஒரு வழிமுறை, நூலக உருப்படிகளைப் பெறுக்கொள்வதற்கான அடிப்படை விதிகளோடு தொடர்புள்ளது. குறிப்பாக திறந்த தட்டுக்களில் நூலக உருப்படிகளை வைக்கவேண்டிய தேவை இவற்றுள் ஒன்று.<ref name="Rubin"/>